Facebook Twitter RSS

Thursday, March 15, 2012

Widgets

ரெயில்வே பட்ஜெட் தாக்கல்:பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அனைத்து வகுப்புக் கட்டணமும் உயர்வு!


Railway Budget 2012
புதுடெல்லி:தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள ரெயில்வே அமைச்சர் திரிவேதி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அனைத்து வகுப்பு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2 பைஸா முதல் 30 பைஸா வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக ரெயில்வே டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
2012-13 ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்:
3ம் வகுப்பு ஏசி வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்வு.
முதல் வகுப்பு ஏசி கட்டணம் கிலோ மீட்டருக்கு 30 பைசா உயர்வு.
300 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்துக்கான கட்டணம் ரூ. 12 அதிகரிப்பு.
புறநகர் ரயில் கட்டணங்கள் கி.மீக்கு 2 பைசா உயர்வு
பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.5 ஆக உயர்வு
3வது வகுப்பு ஏசி பெட்டிகளில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்வு
ஏசி முதல் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 30 பைசா உயர்வு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2013-ல் முடிவடையும்
ஏசி, முதல் வகுப்பு கட்டணமும் உயர்வு – கிலோ மீட்டருக்கு 2 முதல் 30 பைசா வரை கட்டணம் உயர்வு – 300 கி.மீக்கு மேல் கட்டணம் ரூ.12 வரை உயர்வு
2ம் வகுப்பு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள்
ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கு ரயில் கேல் ரத்னா விருது
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
75 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 பயணிகள் ரயில்கள் அறிமுகம்
ரயில்வே துறை செலவுகளை 10% குறைக்க திட்டம்
ராய்பரேலி தொகுதியில் ரயில் பெட்டி தொழிற்சாலை
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரயில்வே துறை ரூ 3.5 லட்சம் முதலீடு செய்ய திட்டம்
விபத்து சதவீதம் 0.77ல் இருந்து 0.55% ஆகக் குறைவு
வரும் நிதியாண்டில் 20,000 வேகன்கள் தயாரிக்க திட்டம்
டபுள் டக்கர் ரயில்வே கன்டெய்னர்கள் தயாரிக்க திட்டம்
சுய அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
ரயில்வே ஆராய்ச்சி, மேம்பாட்டு கவுன்சில் அமைக்க பரிந்துரை
ரயில்களின் சராசரி வேகத்தை 160 கி.மீயாக உயர்த்த திட்டம்
5 ஆண்டுகளில் அனைத்து ரயில்வே கிராசிங்களும் நீக்கம். அனைத்திலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
ரயில்வே துறைக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தேவை
2012-13ம் ஆண்டில் ரயில்வேதுறைக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 60,000 கோடி
அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையில் ரயில்வே பாதுகாப்புக்கு குழு
487 திட்டங்களுக்கு உடனடி நிதி தேவை
புதிய சிக்னல்கள் அமைக்க, சிக்னல்களை மேம்படுத்த ரூ. 39,111 கோடி
புதிய ரயில்களை அறிமுகப்படுத்த புதிய டிராக்குகள் தேவை
19,000 கி.மீ நீள தண்டவாளங்களை நவீனமாக்க திட்டம்
ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு. நிதி தேவை ரூ.45,000 கோடி
கேரளா உள்பட 4 இடங்களில் புதிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை
சென்னை ராயபுரம் ரயில் நிலையம் புதிய முனையமாக்கப்படும்
அனைத்து ரயில் நிலையங்களும் விமான நிலையங்களைப் போல மேம்படுத்தப்படும்
ரயில் நிலையங்களை மேம்படுத்த புதிதாக ரயில்வே நிலைய மேம்பாட்டுக் கழகம் அமைப்பு
நாடு முழுவதும் 11,250 ரயில்வே பாலங்கள் மேம்படுத்தப்படும்
19,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் சீரமைக்கபப்டும்
அனைத்து சிக்னல்களும் நவீனமயமாக்கப்படும்
பயணிகள் பாதுகாப்புக்கு புதிய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்
40% ரயில் விபத்துகள் ஆளில்லா ரயில்வே கேட்களில் தான் நடக்கின்றன
ரயில் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும்
12வது திட்ட காலத்தில் ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ. 7.35 லட்சம் கோடி ஒதுக்கீடு
நவீனமயாக்கல் குறித்து ஆராய சாம் பித்ரோடா தலைமையில் குழு
ரயில்வே பாதுகாப்புக்கு ரூ. 16,842 கோடியில் திட்டம்
ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி தேவை
வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீரை இணைக்க புதிய திட்டங்கள்
தமிழகத்திற்கு ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்
* சென்னை பறக்கும் ரெயில் திட்டம் 2013ம் ஆண்டு செயல்பட தொடங்கும்.
* தமிழ்நாட்டிற்கு 11 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.
* விழுப்புரம் மயிலாடுதுறையிடையே தினசரி புதிய ரெயில்.
* சென்னை பெங்களூர் இடையே குளிர் சாதன ரெயில் சேவை.
* மன்னார்குடி திருச்சி மானாமதுரை இடையே புதிய பயணிகள் ரெயில் இயக்கப்படும்.
* சென்னை விசாகப்பட்டிணம் வாராந்திர புதிய ரெயில் இயக்கப்படும்.
* திருச்சி நெல்லையிடையே தினசரி இண்டர்சிட்டி புதிய ரெயில்.
* விழுப்புரம் காட்பாடி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்.
* ஈரோடு கோவை வழியாக புதிய தாதர் திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ்.
* சென்னை பூரி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.
* கோவையிலிருந்து அகமதாபாத், ஜோத்பூர் வழியாக பிகானிருக்கு புதிய எக்ஸ்பிரஸ்.
* மன்னார்குடி திருப்பதி வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை.
* திருப்பதி மதுரை எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு.
* சென்னை சாலிமர் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.
* மங்களூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் கோவை வரை நீட்டிப்பு.
* மங்களூர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு.
* திருச்சி நாகூர் பயணிகள் எக்ஸ்பிரஸ் நாகப்பட்டிணம் வரை நீட்டிப்பு.
* மதுரை திருப்பதி வாரம் 2 நாள் இயங்கும் எக்ஸ்பிரஸ் 3 நாட்களாக அதிகரிப்பு.
* அரக்கோணம் நந்தலூர் ரெயில் கடப்பா வரை நீட்டிப்பு.
* நிஜாமுதீன் கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரம் 2 முறை இயக்கப்படும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets