Facebook Twitter RSS

Thursday, April 04, 2013

பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?


பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடிக்கும் சமயத்தில், “அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என யார் கூறுகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்




உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

Tuesday, April 02, 2013

தாலிபானை ஒடுக்க இந்தியாவும் சீனாவும் ஓரே அணியில்





என்ன தலைப்பே ஆச்சரியமாய் உள்ளதா?. ஆப்கானிலிருந்து அமெரிக்க 

படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாய் வெளியாகும் 

நெருங்கும் வேளையில் ஆப்கன் மக்களும் அரசும் அதை வரவேற்க, 

ஆப்கனின் அண்மை நாடுகளோ கவலையுடன் அதை பார்த்து 

கொண்டிருக்கின்றன. 

ஆப்கனின் அண்டை நாடுகள் அமெரிக்காவின் வெளியேற்றத்தால் கவலைப்படுவதற்கு காரணம் அமெரிக்காவின் வெளியேற்றம் தாலிபான்களின் எழுச்சிக்கு காரணமாகி விடும் எனும் அச்சமே. அதனாலேயே தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து விட்டு கூட்டணி வைத்து கொள்ள முயல்கின்றன.

Blogger Wordpress Gadgets