Facebook Twitter RSS

Latest News

Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Saturday, August 24, 2013

“மெட்ராஸ் கபே” படத்தில் விடுதலைப் புலிகளை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா?

Source:viruviruppu.com
ற்போது சர்ச்சைகளில் பலமாக அடிபடும் மெட்ராஸ் கபே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற ஆவலை பலருக்கு ஏற்படுத்தியுள்ளன, அந்தப் படம் பற்றி வெளியாகும் செய்திகள். இந்தப் படம் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும. அதன் தலைவர் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்று கூறி படத்தை தடை செய்ய கோரியுள்ளன சில அமைப்புகள்.

Monday, March 11, 2013

தஞ்சை பாராட்டு விழாவிற்கு ரூ 50,000 கோடி செலவாம்!!!!!!!


இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வருவதற்கான வாகன செலவை அ.தி.மு.க மாவட்ட கழகம் ஏற்றுக் கொண்டது. மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து எல்லாம் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை திரட்டி வந்திருந்தார்கள். தலைக்கு 200 முதல் 500 ரூபாய் பணம், இரண்டு வேளை சாப்பாட்டு செலவை உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அளவிலான அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவு! இந்த பணம் எல்லாம் யாருடையது  அ.தி.மு.க ,கழக பணமா ???

Saturday, January 26, 2013

கமலையும் , ரஜினியையும் புரிந்து கொண்டோம் !!


கமல்ஹாசனைப் புரிந்து கொண்டு, அவருடைய நஷ்டத்தையும் புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ் சினிமாவை சர்வதேச அளவுக்கு உயர்த்திய ஒரு மாபெரும் கலைஞனை கஷ்டப்படுத்திவிடக் கூடாது. இஸ்லாமியர்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர் கமல் அவருக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும், திரைப்படத்தை முழுமையாக தடை செய்யாமல் சில காட்சிகளை நீக்கி கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியிட உதவுமாறு இஸ்லாமியர்களிடம் வேண்டுகின்றேன். என ரஜினிகாந்த்  கருத்து வெளியிட்டுள்ளார்.

மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இதுதான் இப்போது சூடு பிடித்துள்ளது.
முஸ்லிம்கள் விஷயத்தில் சரியான பார்வை கொண்டவரைப் போலவும், கமல்ஹாசன் தவறு செய்யாததைப் போலவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இவருடைய உண்மைத் தன்மையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.
விஸ்வரூபம் என்றொரு திரைப்படத்தை பற்றி தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வாகவே இந்தக் கருத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
கமல் தொடர்பான ரஜினியின் பார்வையின் குருட்டுத் தனம் : 
கமல்ஹாசனின் விஸ்வரூபம் தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஐந்து கோரிக்கைகளை இஸ்லாமியர்களிடம் முன் வைத்துள்ளார்.
# கமல்ஹாசனை புரிந்து கொள்ள வேண்டும்.
# விஸ்வரூபத்தின் மூலம் கமலுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க உதவ வேண்டும்.
# தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞனை கஷ்டப்படுத்தக் கூடாது.
# இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவர் கமல்.
# கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படத்தின் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும். 
ரஜினிகாந்த் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் சினிமாத் துரையின் அடாவடித் தனத்தையும், அயோக்கியத் தனத்தையும் பொது மக்கள் இப்போதுதான் சரியாகப் புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் கமலுடைய திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.
சினிமாவின் பேரால் ஐரோப்பாவின் சில்லரைக்கு ஜால்ரா போடும் கமல் போன்றவர்கள் ரஜினியின் பார்வையில் வேண்டுமானால் கலைஞனாக, கலையுலக ஜாம்பவானாக இருக்கலாம். உண்மையை நேசிக்கும், ஒழுக்கத்தை விரும்பும் சுய கவுரவத்தை ஆசை வைக்கும் எந்த மனிதனுக்கும் கமல் என்ன ரஜினி கூட ஒரு சாக்கடை சக்கை தான். தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரம் சினிமாவுக்குத் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்தக் கதாபாத்திரம் ஒரு அப்துல்லாஹ்வாக அல்லது அப்து ரஹ்மானாக தாடி வைத்து குள்ளா போட்ட, முழு நீள அங்கி அணிந்த ஒருவனாகத் தான் காட்சி அமைப்பு உருவாக்கப்படும். காரணம் முஸ்லிம்கள் தான் உலகின் தீவிரவாதிகள் என்பது இவர்களின் குருட்டு கண்களின் இருட்டுப் பார்வை.
ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திடம் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுகோள் விடுப்பது என்பது வடிகட்டிய முட்டாள் தனமாகும்.
அறிவுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் கமலின் மீது கொண்ட நட்பினால் ரஜினி போன்றவர்கள் இப்படியான கோரிக்கையை வைப்பதின் மூலமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. முழு இஸ்லாமிய சமுதாயத்தின் மீதும் இல்லாத அபாண்டத்தைச் சுமத்தியவரை கண்டித்து திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தும் படி ஆலோசனை சொல்ல வேண்டியவர் தங்கள் வருமானத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறி கமல்ஹாசன் திரைப்படத்தில் மூலம் இஸ்லாமியர்களின் மனதைப் புன்படுத்தியதைப் போல் தனது கருத்தின் மூலம் இஸ்லாமியர்களைப் புன்படுத்துகின்றார் ரஜினிகாந்த்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவராக கமலைப் பாராட்டுகின்றார் ரஜினி உண்மையில் முஸ்லிம்கள் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் செய்யும் காரியத்தை அல்ல கமல் விஸ்வரூம் மூலம் செய்திருக்கின்றார்.
இஸ்லாமியர்களின் புனித குர்ஆனை தீவிரவாதத்தைத் தூண்டும் புத்தகமாக சித்தரித்துள்ளார்.
இஸ்லாமிய சிறுவர்கள் கல்விக்கு ஆர்வம் காட்டுவதை விட அதிகமான ஆர்வத்தை ஆயுதப் பயிற்சிக்குக் காட்டுவதாக சித்தரித்துள்ளார்.
முஸ்லிம்கள் தங்கள் மணைவியரை அண்ணியவர்களுக்கு கூட்டிக் கொடுப்பதைப் போல் சித்தரித்துள்ளார்.
திருமறைக் குர்ஆனின் வசனங்களை தனக்குச் சாதகமாக வலைத்து குர்ஆனின் கருத்துக்களை தவறான புரிதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது போல் திரைப்படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான தனது காழ்ப்புணர்வை கட்டுக்கடங்காமல் கக்கியுள்ள கமல்ஹாசன் தான் இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவரா?
கதைக்கு பாதிப்பில்லாத வகையில் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையில் தெளிவான பாசிசம் அடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. திரைப்படத்தின் காட்சியமைப்பில் நீக்கம் செய்து வெளியிடும் அளவுக்கு உள்ள திரைப்படமல்ல விஸ்வரூபம். முழுத் திரைப்படத்தையும் புரக்கணிக்கும் வகையில் அமைந்த ஒரு சியோனிச கொள்கைப் பரப்பும் திரைப்படமாகவே இது அமைந்துள்ளது.
முழு இஸ்லாமிய சமூகத்தையும் இம்சிக்கும் இத்திரைப்படம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதன் தொடரில் பல இயக்குணர்கள் தங்கள் வக்கிர புத்தியை விஸ்வரூபமாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் திரைப்படத்தின் ஹீரோவான கமல் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை அழிப்பவராகவும் அதில் நடித்திருப்பான். இப்படி முஸ்லிம்கள் தான் இந்தியாவையும் இந்த உலகத்தையும் அழிக்க நினைப்பவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்புவதுடன் கடவுள் மறுப்புக் கொள்கை என்றொன்றை தனக்குள் சொல்லிக் கொண்டு காவிப் பயங்கரவாதத்திற்கு தினமும் இவன் துணை போவதை யாரும் மறுக்க முடியாது.
தான் பெற்ற மகளையே அடுத்தவனுடன் அரை குறை ஆடையுடன் ஆட வைத்து ரசித்துப் பார்த்துவிட்டு ‘என்னைப் போன்றே எனது மகளும் சிறப்பாக நடிக்கின்றாள் என்று பெருமைப் பட்டுக் கொண்டவன் தான் இந்த மானங்கெட்ட கமல். இவனுக்கெல்லாம் ஒழுக்கத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது ‘எறுமை மாட்டின் மேல் மழை பெய்வதற்கு சமனானதாகும்’.
ரஜினி என்ற பாசிச பசை :
இன்றைக்கு உபதேசம் (?) செய்யும் ரஜினிகாந்த் தனது நிலையை மறந்து பேசினாலும் முஸ்லிம்கள் அவரை மறக்க மாட்டார்கள். காரணம் கமலின் தோழனாக இருப்பதைப் போல் கமலைப் போன்ற இஸ்லாமிய துவேஷ வெரி இவரிடமும் நிறைந்தே காணப்படுகின்றது.
பால்தாக்கரே என்ற இஸ்லாமிய வெறியன் மும்பையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் இருக்கும் வரைக்கும் அவனுடைய தீவிர ஆதரவாளராகவும், தற்போதும் அவனுடைய கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பவராகவும் இருப்பவர் தான் இந்த ரஜினிகாந்த்.
கமலின் விஸ்வரூபம் விஷயத்தில் வியத்தகு (?) தத்துவம் பேசும் இவர் நடித்து வெளியிட்ட திரைப்படங்கள் மாத்திரம் தத்துவப் பொக்கிஷங்களா? தான் நடித்து வெளியாகிய பல திரைப்படங்களில் இவனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கருப்புப் பணம் கடத்துபவர்களாக, ஒழுக்கம் கெட்டவர்களாக காட்சிப்படுத்தியவன் தான் இந்த ரஜினிகாந்த்.
இவனுடைய சிந்தனைக்கும் கமலுடைய சிந்தனைக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. கமல் முழுப்படமாக தயாரித்ததை இவன் முழுப்படத்தின் சில காட்சிகளாக சித்தரித்திருக்கின்றான். சிவாஜி என்ற பெயரில் இவன் நடித்து வெளியாகிய திரைப்படத்தில் இந்தியாவின் கருப்புப் பணங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி அதனை டாலராக மாற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவருபவர்களாக முஸ்லிம்களை சித்தரித்திருப்பான்.
முஸ்லிம் தான் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றானா? இந்துக்களில், கிருத்தவர்கள், சீக்கியர்கள் யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லையா? அவர்களின் பெயரால் இவர்கள் திரைப்படம் தயாரித்தார்களா?
கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.
கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.
இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?
அமைதியான ஒரு மார்க்கத்தையும் அதைப் பின்பற்றுபவர்களையும் காட்சி ஊடகத்தின் மூலமாக தீயவர்களாக, தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் என்ன நன்மையை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும் இஸ்லாமியர்களைப் பொருத்த வரையில் இருவருமே ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம்.
பேசித் தீர்வு கண்டு திரைப்படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைக்கும் அயோக்கியன் ரஜினிகாந்திடம் சில கேள்விகள்.
# பல கோடி செலவு செய்து படம் எடுத்துள்ளார் அதனால் படத்தை திரையிட உதவுங்கள் என்று வேண்டு கோள் விடுத்துள்ளீரே உனது இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்து 100 கோடி செலவில் கமல்ஹாசன் ஆபாசப்படம் தயாரித்தால் பேசித் தீர்த்து திரைப்படத்தை வெளியிட உதவி செய்வீரோ?
# உனது இரண்டு பெண் பிள்ளைகளின் நிலையை கவணித்தாலே இவனின் உண்மை நிலை தெளிவாகப் புரிந்துவிடுமே?
# தான் கட்டிய கணவனையே கமல்ஹாசனின் மகளுடன் கட்டிப்பிடித்து படுக்கையறைக் காட்சியில் நடிக்க வைத்தவள் தானே உனது மகள் ஐஸ்வர்யா? உன் குணம் தானே உனது பிள்ளைக்கும்.
# நீ ஒரு மொடாக் குடிகாரன் என்பது எங்களுக்குத் தெரியும். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பார்கள் இப்படி உன்னுடைய இந்தப் பேச்சை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம். காரணம் எங்கள் சமுதாயத்தின் மானத்தில் விளையாடுகின்றாய்.
# நீ பெற்ற மகள் ஐஸ்வர்யாவையும், உனது மருமகன் தனுஷையும் பார்வையாளராக வைத்துக் கொண்டு எந்திரன் திரைப்பட விழாவில் கூத்தாடி ஐஸ்வர்யாவைப் பார்த்து ‘ஐஸ்வர்யா மேக்கப் இல்லாமலே சூப்பர் பிகரு’ என்று சொன்ன வெட்கம் கெட்ட தகப்பன் தானடா நீ?
# பெரிய செலவில் எடுத்த படம் காப்பாற்ற உதவுங்கள் என்று பாதிக்கப்பட்ட எங்களிடம் வெட்கம் கெட்டு கேட்பதை விட அடுத்தவன் மனைவியை கட்டிப் பிடித்து ஆடி நீ சம்பாதித்த பணத்தில் இருந்து கமலுக்கு உதவி செய் பார்க்களாம்?
அன்பின் நல்ல உள்ளங்களே !
நம்மைப் பொருத்த வரையில் சினிமா கூத்தாடிகள் அத்தனை பேரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம் அது ரஜினியாக இருந்தாலும் சரி கமலாக இருந்தாலும் சரி இவனைப் போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளை ரசித்து ருசித்து பார்ப்பதின் ஊடாக இவனைப் போன்ற கூத்தாடிகளின் வளர்ச்சிக்கு நாம் துணை போவதென்பது தெளிவாக நம்மை பாவத்தின் பக்கம் இட்டுச் செல்வதாகும். ஆதனால் இது போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளுக்கு துணை போகாமல் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!                                                          1
நன்றி : ரஷ்மின் 

உண்மையான கொள்ளைகாரர்கள் யார்?


 வீரப்பன் பிறந்த நாளை முன்னிட்டி  கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்  கேக் வெட்டி கொண்டாடினர். அதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.   இதனால் சட்டக்கல்லூரி வளாகமே பரப்பரப்பானது.

கோவை மட்டும் இல்லாமல், சத்தியமங்கலம், பர்கூர், அந்தியூர், மேட்டூர், தாளவாடி, திம்பம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியிலும், வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இது  குறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள்,  ’’வீரப்பன் இருந்த வரை காவிரியில் கர்நாடகம் நீரை தந்தது. வீரப்பன் தமிழ் நாட்டிற்கு சிறந்த காவலாக இருந்தார்.  அவருடைய மறைவுக்கு பிறகு கர்நாடகாவை சேர்ந்த சில அமைப்புகள் ஒகேனக்கல்லில் தமிழ் நாட்டுக்கு சொந்தமான நிலப்பகுதியை எங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது என்றார்கள்.

சிந்திக்கவும்: சட்டம் படிக்கும் மாணவர்களும், வழக்கரிஞ்சர்களும், மக்களும் அரசாங்கத்தையும், போலீஸ்சையும் விட வீரப்பனை நம்புகின்றனர். படித்தவர்களும், மாணவர்களும்  போலீஸ்சையும், அரசாங்கத்தையும்  பற்றி எவ்வளவு கேவலமான மதிப்பீடு செய்திருகின்றனர் என்று இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது. வீரப்பனை மக்கள் கொள்ளைகாரனாக பார்க்க வில்லை, கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மற்றும் உள்ள ஊழல் அமைச்சர்களையும், அதிகாரிகளையுமே உண்மையான கொள்ளைகாரர்களாக பார்கிறார்கள்.

Thursday, January 24, 2013

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரி .'விஸ்வரூபம் '



இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை 'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .
இஸ்லாத்தின் மீதான இறை நிராகரிப்பாளர்களின் காழ்ப்புணர்வுகள் இஸ்லாத்தின் வரலாற்றோடு தொடர்ந்தும் வந்துள்ளது . அந்த வகையில் முஹம்மத் (ஸல் ) அவர்களின் சந்ததியாகிய எம்மையும் அது தொடர்கின்றது . இந்த நிகழ்வுகளில் முஸ்லீம் உம்மாவின் எதிர் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மீள் பரிசீலனை அவசியமானது . உண்மை என்னவென்றால் இந்த 'தாகூதிய ' சோழியர்கள் தமது துர்நாற்றமான குடுமியை ஆட்டுவதற்கு எமது கைகளையே எம்மை அறியாமல் பயன் படுத்துகின்றார்களா ? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
இது தொடர்பில் வரலாற்றின் முன்னைய நிகழ்வுகளை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை வஹியின் வெளிச்சத்தில் சுன்னாவில் இருந்து வரையறுப்பது இந்த இடத்தில் மிக முக்கியமான பணி . ஆனால் இங்கு உணர்வுகளுக்கு அதி கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் போது
எதிரியின் கருத்துச் சுதந்திர 'சினைப்பர்' குறிக்கு நாமே நெற்றியை காட்டுவது போல் ஆகி விடாதா ?
'சாம் பாசில்' 'யூ டியூபில்' விட்ட அசிங்கமான குப்பை முஸ்லீம்களின் உள்ளங்களில் பயங்கரமான பூகம்பத்தை உண்டு பண்ண, ஒவ்வொரு முஸ்லிமும் கண்களில் கண்ணீரோடும் எதிர்க்கும் உணர்வோடும் வீதிக்கு இறங்கினார்கள் . அந்த மறக்க, மன்னிக்க முடியாத வலி மீது பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' கார்டூன் தாக்குதல் நடத்தியது ! பின் 'பெல்ஜியம் , பின் பிரான்ஸ் என இந்த மீடியா தாக்குதல் தொடரும் வரிசையில் இந்தியாவும் 'துப்பாக்கியோடு ' தனது மீடியா 'பிஸ்டல் ' குழுவை களமிறக்கியது . உண்மையில் இந்தியாவின் சோசியல் மீடியா இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அவமானப் படுத்துவது இதுதான் முதற் தடவையல்ல . அந்த வரிசையில் இப்போது விடயம் 'விஸ்வரூபம் 'எடுத்துள்ளது .
காஸ்மீரையும் , பாகிஸ்தானையும் காட்டி தேசப்பற்று ரீல் விடும் இவர்களது வழமையான பணியை நாம் மறந்து விடக்கூடாது . 'இரத்தம் சொட்டும் கத்தி ' ,கீறிக் கிழிக்கப் பட்ட உடல்,இப்படிக்காட்டி சமூகப் பார்வையை திருப்புவதை விட முஸ்லிமின் உணர்வு என்ற 'செப்டரில்' , நிறைய இலாபம் இருப்பது முதலாளித்துவம் அனுபவித்த உண்மை . அது தொடர்கிறது .
எண்ணத்திலும் வழிமுரையிலும் சிலுவை சுமந்து உடையில் காவி உடுத்திய இந்த சண்டாளர்கள் கருத்துச் சுதந்திரம் எனும் போலித் தனத்தில் அரசியல் இராஜ தந்திர வலிமை அற்றிருக்கும் முஸ்லீம் உம்மத்தை சீண்டிப்பார்க்க நினைக்கிறார்கள் ! நாம் சாத் வீகமாக சென்றால் ஆர்ப்பாட்டம் , ஊர்வலம் ,மகஜர் ,மனு என சட்டத்தில் உள்ளிருந்தே 'போலிஸ்' பாதுகாப்போடு எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் சொல்ல முடியுமாம் (எமது கருத்துச் சுதந்திரம் ) ! வன்முறையை செய்தால் அதே 'போலிஸ் ' 'என்கவுண்டர் ' பண்ணுமாம் ! சபாஸ் சரியான போட்டி என முதலாளித்துவ மேட்டுக்குடி பார்த்து ரசிக்குமாம் . இது அதிகாரம் கையில் இருக்கின்றது ; என்ற ஆணவம் தவிர வேறில்லை . அமெரிக்கா முதல் இந்தியா வரை இதுதான் நிலை .
சரி கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என ? அவர்களிடம் கேட்டால் அதிலும் அவர்களது அப்பட்டமான செயல்களைச் ஆதாரத்தோடு சொல்லி அடிமடியில் யாராவது கைவைத்தால் ,பாவம் அவன் தனது கருத்துச் சுதந்திரத்தை சிறைச் சுவர்களுக்கு முன்னால் தான் சொல்ல முடியும் .
மேற்குக்கு ஒரு தாரிக் பின் சியாதும் , சிந்துவுக்கு ஒரு முஹம்மது பின் காசிமும் மீண்டும் வரவேண்டிய நியாயத்தை இந்த முஸ்லீம் உம்மா உணர்ந்து உழைக்காத வரை எமது போராட்டங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் அவனது நியாயங்கள் சகிதம் தான் தொடரப் போகின்றது .
எமது நெருப்பில் எதிரி குளிர் காய்வான்
அவ்வளவுதான் 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? - கி.வீரமணி !!



திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லையேல் 24-ந் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும் ஆர்ப்பரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? ஷிண்டே உள்துறை மந்திரி. ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்?
 
ஷிண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை மந்திரியாக இருப்பது என்பது உயர் சாதிவர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும். அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும். சுசில்குமார் ஷிண்டே காவி தீவிரவாதம் குறித்து கூறியதில் தவறு என்ன? ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்

Thursday, January 03, 2013

ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!



ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!
மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட கள்ளநரி ஊடக கூட்டங்கள் முஸ்லிம்களை பற்றிய பொய்யான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள், அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள சகோதரர்கள் உண்மை நிலையை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,
தாங்கள் உண்மை நிலையை விளக்கிய பிறகு தான் மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட குள்ளநரி கூட்டத்திற்கு மரண சாசனம் எழுத நீதிமன்ற படியை மிதிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகிறோம்,
இறைவனின் மாபெரும் கிருபையினால் கிறித்தவ நாடான ஜெர்மனியில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை நாம் கண்டு வருகிறோம், அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கிறித்தவ சகோதரர்கள் ஆண்களும், பெண்களும் இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள், அந்த வகையில் ஒரு சிலரின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...
1) கான்சர்ச்கி (Ganczarski)
2) குத்து சண்டை வீரர் பியர் வோகல் (Pierre Vogel a german Boxer)
3) யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes)
இப்படி பல சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக அலைகடலென சத்திய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் 3000 க்கும் அதிகமான சகோதரர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகை தந்துள்ளார்கள்,
இவ்வாறு ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் காவிவெறி பிடித்த பத்திரிக்கையான மாலைமலர் ஜெர்மனியில் உள்ள ஒரு இந்தியர் ரோட்டில் நடந்து செல்லும்போது திடீரென இரண்டு தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு மாறுமாறு மிரட்டினார்களாம்,
அந்த இந்தியர் இஸ்லாத்திற்கு வரமருத்துவிட்டாராம், ஆகையால் அவருடைய நாக்கை தீவிரவாதிகள் அறுத்து விட்டார்கள் என பொய்யான செய்தியை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்தை விதைத்துள்ளது மாலைமலர்,
மாலைமலர் எடுத்த அதே வாந்தியை ஒன் இந்தியா தளமும், விகடன் செய்திகள் தளமும் அதே செய்தியை வெளியிட்டு தானும் ஒரு காவிக்கூட்டம் என்பதை தெளிவாகவே நிரூபித்து இருந்தது,
இந்த செய்தியை முகநூலிலுள்ள சுவாமி வித்தியானந்தா என்பவர் வெளியிட்டு ஒன்றும் அறியாத மக்களுக்கு மேலும் விஷக்கருத்தை பாய்ச்சுகிறார்,
ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து வெளியிடும் காவிக்கூட்டங்களே....
1) இந்தியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே, அந்த இந்தியரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
2) ஜெர்மனியில் ஒரு இந்தியருக்கு பாதிப்பு என்றால் இந்திய அரசு இதுவரை ஜெர்மனி அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
3) பாதிக்கப்பட்ட இந்தியர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார், அவரை எந்த மருத்துவமனையில் வைத்து மருத்துவம் செய்யப்படுகிறது,
4) இந்தியரின் நாக்கை ஜெர்மனியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் துண்டித்தார்கள் என பொய்யை விதைக்கிறாயேஸ. அந்த முஸ்லிம் இயக்கத்தின் பெயர் என்ன? அந்த இயக்கத்தினரை ஜெர்மனி காவல்துறை கைது செய்ததா?
5) மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற அந்த சம்பவம் BBC, Gulf News, Yahoo News உள்ளிட்ட உலகளாவிய ஊடகங்களில் வெளிவராத செய்தி எப்படி மாலைமலர், ஒன் இந்தியா, ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் வந்தது எப்படி? உங்களுக்கு செய்தி சொன்ன செய்தியாளர் யார்?இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் உங்களால் பதில் சொல்லமுடியாது, ஏனென்றால் உன்னிடம் உண்மை இல்லை என்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதோ தெரியும் ஆனால் உங்களையும் நல்லவர்களாக நினைத்து கொண்டிருக்கும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உண்மை நிலையை புரியவைக்காமல் விடமாட்டோம்,
ஜெர்மனியில் இஸ்லாத்திற்கு வராவிட்டால் நாக்கை அறுப்பதாக இருந்தால் ஜெர்மனியில் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா? ஆனால் அங்கு உள்ள நிலை என்ன ? கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்,
இஸ்லாத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை என்பதை உலக மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இப்படி பட்ட உன் நச்சுக்கருத்தை விதைத்தால் மக்களுக்கு எடுபடும் என நினைக்கிறாயோ?
இதிலிருந்தே மாலைமலர், ஒன் இந்தியா, விகடன் செய்திகள் உள்ளிட்ட குள்ளநரி கூட்டங்கள் உண்மைக்கு மாறான நச்சுக்கருத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது திட்டவட்டமாக புரிகிறது,
அப்படி நீங்கள் சொல்வது போல் உண்மையாக இருந்தால்ஸ அதாவது ஒரு இந்தியர் இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புருத்தப்பட்டு அவர் மாற மறுத்த காரணத்தினால் தீவிரவாத இயக்கத்தினர் அவருடைய நாக்கை துண்டித்து இருப்பார்களேயானால்,
அந்த கேவலத்தை நீ மக்களுக்கு கொண்டு சென்றதை விட நாங்கள் கொண்டு செல்கிறோம், நாங்களும் இந்தியர்கள் தான், எங்கள் சக இந்தியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை,
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!   source nidur.info

Saturday, December 29, 2012

தமிழகத்தில் “ஸ்மார்ட்” ரேஷன் கார்டு அறிமுகம் !



சென்னை: தமிழகத்தில் தற்போது, புழக்கத்தில் உள்ள, குடும்ப அட்டைகளை அடுத்த 2014ம் ஆண்டு வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 2015ம் ஆண்டில் "ஸ்மார்ட்” குடும்ப அட்டையை பொது மக்களின் புழக்கத்துக்கு கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், தற்போது, புழக்கத்தில் இருந்து வரும் குடும்ப அட்டைகளை 2011 மற்றும் 12ம் ஆண்டுகளுக்கான, கூடுதலாக, உள்தாள் இணைக்கப்பட்டு, கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த உள்தாள்களும், இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவதால் ஜனவரி, 1 முதல் குடும்ப அட்டைகளில்  புதிதாக உள்தாள்கள் இணைக்கப்பட வேண்டும். "தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப
அட்டைகளின் செல்லத்தக்க காலம், 2013 ஜன., 1ம் தேதியில் இருந்து, டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது' என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்தாட்களை அச்சடித்து, சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் வினியோகித்து, அட்டைகளில் ஒட்டும் பணி அடுத்த, இரண்டு மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அட்டைகளின்  செல்லத்தக்க காலம், ஓராண்டுக்கு, அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டாலும், அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்தே, உள்தாள்களை வழங்க, அரசு, முடிவெடுத்துள்ளது. தற்போது, அச்சிட உள்ள, உட்தாள்கள், 2013 மற்றும் 2014ம் ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இனி புதிதாக குடும்ப அட்டை வழங்கப்படும்போது, அது மின்னணு தகவல்கள் அடங்கியதாகவே இருக்கும். தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில், கண் கருவிழி, கைவிரல் ரேகை பதிவு கொண்ட, ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் இதற்காக கண் கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுப் பணி நடந்து வருகிறது. அடுத்த ஓராண்டில் முழுமையான கணக்கெடுப்புப் பணி முடிந்து, தகவல் தொகுப்பை பெற்று அதற்கு, பின் தான், ஸ்மாட் கார்டு, தயாரிப்பு பணிகளை துவங்க முடியும். தமிழகத்தில் 2015ல் ஸ்மார்ட் குடும்ப அட்டை புழக்கத்துக்கு வரத்தொடங்கும். அதற்கு முன், முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பரீட்சார்த்தமான முறையில், ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்குவதற்கான, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.

Wednesday, December 26, 2012

மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வலியுறுத்தல்


சென்னை.டிச.26 -  தமிழகம் கடும் மின்பற்றாக்குறையில் தத்தளித்து வருகிறது. எனவே இடைக்கால நிவாரணமாக கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம்,வல்லூர் மின் நிலையம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா   வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்​அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:​
சமீப காலமாக தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவு கடும் மின் தட்டுப்பாடு பிரச்சினையில் இருப்பதை தாங்கள் அறிவீர்கள் தமிழகத்துக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் பல வழிகள் வாயிலாக 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. எனவே, 4 ஆயிரம் மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த 2011​ம் ஆண்டு தமிழ்நாட்டின் 3​வது முறையாக பதவி ஏற்றபோது தமிழ்நாட்டுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்கவேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் மத்திய அரசின் எதிர்மறைவான நடவடிக்கையால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதே நேரத்தில் கடந்த 6​7​2011 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். ஆனால் எங்களுக்கு (தமிழகத்துக்கு) 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
23​10​2012 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் டெல்லி மாநில அரசு பயன்படுத்தாமல் ஒப்படைத்த மத்திய தொகுப்பு மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதில் எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக மத்திய அரசு வேண்டுமென்றே எதிரான பதிலையே அளித்தது.
எனவே குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை அருகேயுள்ள வல்லூர் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2830 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்கவேண்டும்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மின் திட்டங்கள் முழுமையாக செயல்படும் வரை, கடுமையாக மின்தட்டுப்பாட்டினால் தவிக்கும் தமிழக மக்களுக்கு இடைக்கால ஏற்பாடு ஆக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கூடங்குளத்தில் அணுமின் திட்டம் இடையூறு எதுவுமின்றி சிறப்பாக செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதும் தாங்கள் அறிந்ததே. சமீபத்தில் நான் உங்களை சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து நடந்த போராட்டங்களின்போது எழுந்த மிகப்பெரிய சட்டம் ​ ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க எனது தலைமையிலான அரசு எடுத்த முயற்சிகளை தாங்கள் கனிவுடன் கேட்டு அறிந்தீர்கள்.
பதிலுக்கு கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்த்தேன். காரணம் எதுவுமின்றி இதை நான் குறிப்பிடவில்லை. அதற்கான முன் நிகழ்வுகள் இல்லாமலும் இல்லை.
ஆந்திரபிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்ட சிம்ஹாத்ரியில் உள்ள மத்திய அனல்மின் உற்பத்தி நிலையத்தில் தலா 500 மெகாவாட் மூலம் 2 யூனிட்களில் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை அனைத்தும் ஆந்திர மாநிலத்துக்கே வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின் தட்டுப்பாடினால் கஷ்டப்படும் மக்களுக்கு கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இறுதியாக தமிழ்நாட்டில் மத்திய அரசு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் இடைக்கால அளவாக வழங்கவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் எங்களுக்கே வழங்கவேண்டும் என்பதை தாங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதை உடனடியாக பரிசீலித்து எங்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் வழங்க வேண்டும்.பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதி என்று மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அதை நிறுத்தி தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு முதல் ​ அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

வெடிவிபத்துக்கு காரணம் என்ன?


சேலம்: விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்பத்தில் 40 பேர் பலியாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளை சோதனையிடவும், லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விதிமுறையை மீறி செயல்படும் பட்டாசு ஆலையின் உரிமைத்தை ரத்து செய்யும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள செங்காட்டூர் பிரிவு கரட்டுப்பகுதியில் 2 கட்டிடங்களில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 7 பேர் பலியாகியுள்ளனர். இது அதிகாரிகளின் சோதனையில் தப்பிய லைசென்ஸ் இல்லாத ஆலை என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் லைசென்சுடன் இயங்கிய இந்த ஆலைக்கு தற்போது வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.  இதனால், நடப்பாண் டுக்கு அனுமதி பெறாமலேயே ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலை சேலம்&மேட்டூர் மெயின் ரோட்டில் செங்காட்டூர் பிரிவு சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மறைவான இடத்தில் அமைந்துள்ளது. மேச்சேரியை அடுத்துள்ள உப்புபள்ளத்தில் மற்றொரு பட்டாசு ஆலையை சாந்தி நடத்தி வந்துள்ளார். இதில் உப்புபள்ளத்தில் உள்ள ஆலைக்கு மட்டுமே அவர் முறையாக லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து பகுதியை பார்வையிட வந்த மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் இதுபற்றி கேட்டபோது, ‘இந்த பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

அதனால் இது லைசென்ஸ் ஆலை தான்,‘ எனக் கூறினார். தனியார் பட்டாசு ஆலைக்கு 15 கிலோ வெடி மருந்தை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ஆலையில் சுமார் 100 கிலோ அளவுக்கு வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் விபத்து ஏற்பட்டதும் 2 கட்டங்களும் தரைமட்டமாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் புதுப்பிப்புக்கு கடந்த 31.3.2012 தேதியில் விண்ணப்பம் வந்துள்ளது. அதற்கான பணமும் கட்டப்பட்டுள்ளது. ஆலையை போலீ சாரும், வருவாய்துறையின ரும் இணைந்து சோதனை நடத்தினர். எப்படியோ தற்போது விபத்து ஏற்பட்டு விட்டது,‘ என்றார்.  பட்டாசு ஆலையை புதுப்பிக்க கடந்த மார்ச் மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 9 மாதமாக அந்த புதுப்பிப்பு விண்ணப்பம் கிடப்பில் கிடந்துள்ளது. புதுப்பிப்பு அனுமதியை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சோதனை நடத்தி, ஆலையை மூடியிருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.எஸ்பி பேட்டி: அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், ‘‘விரிவான விசாரணையை மேற்கொள்வதால், விபத்து குறித்து முழுவிவரம் தெரியவரும்,‘‘ என்றார்.


குடும்பமே பலியான சோகம்
வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையை நடத்தி வந்தவர் சரவணன். இவர் மேச்சேரி உப்புபள்ளத்தில் மற்றொரு பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி சரவணன் உடல் சிதறி பலியானார். அதன்பின் தற்போது நேற்று நடந்த செங்காட்டூர் பிரிவு கரட்டு பட்டாசு ஆலை வெடி விபத்தில் அவரது மனைவி சாந்தி, மகன் சூர்யா பலியாகியுள்ளனர். அவரது மகள் அம்மு மட்டுமே தப்பியுள்ளார். பட்டாசு விபத்துகளில் குடும்பமே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே பயங்கரம் பட்டாசு விபத்தில் 8 பேர் பலி


சேலம்: சேலம் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 4 பெண்கள்,  3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி இறந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சாந்தி(36). இவர்கள் உப்புபள்ளம் மற்றும் செங்காட்டூர் பிரிவு காட்டுவளவு கரடு ஆகிய 2 இடங்களில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இவர்களுக்கு சூரியா(10), அம்மு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு உப்புபள்ளம் ஆலையில் நடந்த தீ விபத்தில் சரவணன் இறந்தார். இதன் பின்னர் சாந்தி 2 தொழிற்சாலைகளையும் நிர்வகித்து வந்தார். பகலில் மட்டும் இந்த ஆலைகளில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சாந்தி, தனது குழந்தைகள் சூரியா, அம்மு ஆகியோரை அழைத்துக் கொண்டு காட்டுவளவு கரடு பட்டாசு ஆலைக்கு சென்றார்.

 அங்கு வழக்கமாக பணிபுரியும் தொழிலாளர்களுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். விடுமுறை நாட்களில் பட்டாசுக்கு லேபிள் ஒட்டுதல், சணலை தயார் செய்தல் போன்ற பணிகளை மாணவ, மாணவிகள் செய்வது வழக்கம். நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் மருந்து கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவியதில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ வெடி மருந்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நாட்டு வெடிகள் உள்ளிட்டவை வெடித்து சிதறின.  பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆலை உரிமையாளர் சாந்தி, இவரது மகன் சூரியா (12), சிவகாமி (40), கேசவன்(12) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 

ஆலையில் பணிபுரிந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீயில் கருகியும் உயிருக்கு போரா டினர்.  20 நிமிடத்துக்கும் மேலாக மருந்து மற்றும் வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. படுகாயமடைந்த பாறைக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்(50), விஜயா(37), இவரது மகள் விமலா(17), சதீஷ்(19), இவரது சகோதரி தீபா(12), ஈஸ்வரி (35), பழனியப்பன் (40) ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்க ளில் தீபா மரணமடைந்தார். மேலும் மாணவர்கள் பவித்ரா(11), மனோஜ்குமார்(12) ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தங்கம், ஈஸ்வரி, விஜயா ஆகியோர் இறந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களிடம் மாஜிஸ்திரேட் ரபீக் வாக்குமூலம் பெற்றார். விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் மாணவர்கள். மேலும் சில மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Monday, December 24, 2012

தூத்துக்குடியில் ஒரே வாரத்தில் 3 மாணவிகள் பலி: எங்கே போகிறது தமிழகம்?



தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 மாணவிகள் இறந்துள்ளனர். அதில் ஒருவர் விபத்தில் இறந்தார், மீதமுள்ள இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் செவல்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. அவரது மகள் சுதா(17). பிளஸ் டூ மாணவி. கடந்த 18ம் தேதி காலை அவர் பள்ளி செல்ல வேறு ஒரு பள்ளி வேனில் லிப்ட் கேட்டுச் சென்றார். வளைவு ஒன்றில் வேன் செல்கையில் திடீர் என்று கதவு திறந்ததில் சுதா கீழே விழுந்தார். இந்நிலையில் வேன் நிலைதடுமாறி அவர் மீது கவிழ்ந்ததில் சுதா பரிதாபமாக இறந்தார். அதே நாளில் திருச்செந்தூர் மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. நகரில் 9ம் வகுப்பு படித்த தனது மகள் பபிதா(14) உறவினருடன் படுக்கையில் இருந்ததைப் பார்த்த அலெக்ஸ் பெற்ற பிள்ளையை தன் கையாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி கிளாக்குளத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி புனிதா(13) பள்ளிக்கு சென்றவர் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். விசாரணையில் கூலித் தொழிலாளி சுப்பையா என்பவர் அவரை கற்பழிக்க முயன்று கொலை செய்தது தெரிய வந்தது. தூக்குடியில் ஒரே வாரத்தில் 3 மாணவிகள் இறந்துள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

கம்பிகளுக்குப் பின்னல் அதிகரிக்கும் முஸ்லிம்கள் !! - இந்திய டுடே கட்டுரை

source asiananban:




Friday, December 21, 2012

மீனவர்களை கொன்ற வழக்கு: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த நாடு செல்ல இத்தாலி கடற்படை வீரர்களுக்கு அனுமதி !



கடந்த பிப்ரவரி மாதம் கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் என்று சந்தேகப்பட்டு, இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக இத்தாலிய கடற்படை வீரர்கள் லத்தோர் மாசிமில்லியனோ, சல்வடோர் ஜிரோன் ஆகியோர் மீது கேரள ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ்பண்டிகையை இத்தாலியில் குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

”வறண்ட நகரமாகி வரும் சென்னையிலுள்ள நிலத்தடி நீரால் நோய் பரவும்!”- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!



”’இன்னும் மூன்றே ஆண்டுகளில் வறண்ட நகரம் என்ற பெயரை ஹைதராபாத் பெற்று விடும். சென்னையும் அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சென்னையில் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது.”’ என்ற அதிர்ச்சி தகவல் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் வெளியாகியுள்ளது. பருவ மழை குறைந்ததால் விவசாயம் பொய்த்துப்போய் உள்ளது. குளம், ஆறு, வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்ட நிலத்தடி நீரில் அதிகளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன.

Saturday, November 17, 2012

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: நீக்குவதற்கு இயக்குநர் ஒப்புதல்!


Thuppaki-team-with-muslims-
சென்னை:நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பாக அண்மையில் தீபாவளி தினத்தில் ‘துப்பாக்கி’ என்ற திரைப்படம் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டது. இப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அவதூறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.

Friday, November 16, 2012

போதையில் மிதந்த தமிழகம்! – 2 நாளில் ரூ.270 கோடி விற்பனையாம்!


போதையில் மிதந்த தமிழகம்!
சென்னை:தனிமனித வாழ்க்கையையும், குடும்பத்தையும், சமூகத்தையும் சீரழிக்கும் மதுவை மக்கள் நலன் கருதாமல் வருமானத்தை குறிவைத்து அரசே கடைகளை நடத்தி வரும் அலங்கோலம் தமிழகத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. பண்டிகை நாட்களில் வழக்கமாக விற்பனை சூடு பிடிக்கும். தீபாவளி என்றால் உச்சத்தை தொடும்.

Thursday, November 08, 2012

மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!


Mettupalayam-in-Coimbatore
மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

Monday, October 01, 2012

பாஸ்போர்ட் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!


Hike In Indian Passport Fee
டெல்லி: நிர்வாகம், முதலீட்டு செலவு, கருவிகள் வாங்குதல், போலீசாருக்கு வழங்கப்படும் ஈட்டுத் தொகை, தபால் துறைக்கான கட்டணம், அச்சக செலவு, தகவல் தொழில்நுட்ப செலவு போன்றவை பெருமளவு அதிகரித்ததால், பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.  இதன்படி அப்புதிய விண்ணப் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய கட்டண விபரம்
பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 2500 ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, கடைசியாக பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 40 அமெரிக்க டாலர்களில் இருந்து 75 அமெரிக்க டாலர்களாகவும், 48 யுரோவில் இருந்து 60 யுரோக்களாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. source thoothu online
Blogger Wordpress Gadgets