![மாயாவதி ஆட்சியில் நிறுவப்பட்ட பூங்காக்கள் பள்ளிக்கூடங்களாக மாற்றப்படும்: அகிலேஷ் யாதவ்](http://www.thedipaar.com/pictures/resize_20120414054251.jpg)
சாலை மேம்பாடு, மின்சாரம், குடிநீர் வசதி, நிலக்கரி தொடர்பான பிரச்சினைகள், நடக்க இருக்கும் கும்ப மேளா மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கிடைத்தால் மட்டுமே பொதுமக்களுக்கு இந்த வசதிகளை செய்து கொடுக்க முடியும் என பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் உ.பி. மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்குவதாக தன்னிடம் கூறியதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மேலும், மாயாவதி ஆட்சியில் நிறுவப்பட்ட பூங்காக்கள் ஏற்கெனவே நாங்கள் கூறியபடி பள்ளி கூடங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மாற்றப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment