Facebook Twitter RSS

Sunday, December 02, 2012

Widgets

“ஷியாக்கள்” என்று ஒன்றும் தெரியாமல் ஒலமிடும் ஓநாய்களிற்கான பதிவு - இஸ்லாத்தின் எதிரிகளான ஷியாக்களை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!! PART 2

இன்று எமது நாட்டில் பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களின் செல்வாக்கு அவற்றிற்கிடையிலான முரண்பாடான கொள்கைகள் அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவமளிக்கின்ற அசத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு சத்தியத்தை தூக்கி எறிந்து விடுகின்ற இயக்கங்களின் அமைப்புகளின் அறிமுகம் என்பன இலங்கை முஸ்லிம்களின் சமகால சமய சமூக பண்பாடு அரசியல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறியுள்ளன. இயக்க நடவடிக்கைகளின் செல்வாக்கு ஒவ்வொரு தனிமனிதனையும் அசைத்து வரும் இக்கால கட்டத்தில் அவற்றை மதிப்பீடு செய்வதும் விமர்சனப் பார்வைக்குள் உட்படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.
இன்று இலங்கையில் காணப்படும் இயக்கங்கள் அவற்றின் சர்வதேச ஸ்தாபகர்களினதும் தலைவர்களினதும் குறிக்கோள்களையும் திட்டங்களையும் செயற்படுத்தும் நடவடிக்கைகளையே பெரும்பாலும் தீவிரமாக அனுஷ்டிக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலேயே சாத்தியமற்றுப்போன அநியாயமாகப் பெறுமதியான பல உயிர்களைப் பலியெடுத்த கொள்கைகளை முஸ்லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கையில் அமுல்படுத்தி அதே நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
இஸ்லாத்தைப் பற்றியும் அதன் ‘கிலாபத் ஜிஹாத்’ பற்றிய தெளிவான அறிவற்ற உணர்ச்சிக் கோஷங்களுக்கு அடிமைப்பட்ட தூய்மையான ஏகத்துவக் கொள்கையை சிதைத்துவிட்ட அற்பமான அரசியல் நோக்கம் கொண்ட நபி (ஸல்) அவர்களின் தூய்மையான ஸுன்னாவைக் கொச்சைப்படுத்துகின்ற கோமாளிக் கூட்டங்களினால் இன்றுவரை உலகில் எங்கும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. இவர்களால் நிலைநாட்டவும் முடியாது. ஏனெனில் நபி வழியைப் புறக்கனித்த எந்தக் கூட்டத்திற்கும் அல்லாஹ் தனது உதவியை வழங்கிய வரலாறுகள் இல்லை.
இஸ்லாமிய வரலாற்றின் துவக்க நூற்றாண்டில் தோன்றிய ‘கவாரிஜ்’கள் போன்று இன்று அல்ஜீரியாவிலும் எகிப்திலும் பாகிஸ்தானிலும் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் ஏற்படுத்தியிருக்கின்ற இரத்தக் களறி பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களைப் பலியெடுத்து வருகின்றன. பன்னாயிஸம் பலவாயிரம் பேரை எகிப்தில் பலியெடுத்துள்ளது. எனினும் எத்தகைய பலனையும் கண்டதில்லை. பன்னாயிஸம் எகிப்திலும் மௌதூதியிஸம் பாகிஸ்தானிலும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் எத்தகைய அரசியல் மாற்றங்களையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஒரு நூற்றாண்டு காலத்தை அண்மித்தும் அவர்களின் கொள்கை வெற்றிபெறவில்லை என்றால் அக்கொள்கை உயிரோட்டமற்ற சாத்தியமற்ற நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது புலனாகிறது.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே அந்த நாடுகளில் இவர்களின் அதிகார வீச்சு ‘கிலாபத்’ கனவு ஏதோ சாத்தியவரைக்கோட்டின் எல்லை தாண்டிய ஏதோ ஒரு மங்கிய குழப்பமான புள்ளியில் நின்று கொண்டிருக்கும் போது மிகச் சிறுபான்மையினராக மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில் முற்போக்கும் ஆழமான இஸ்லாமிய அறிவும் இல்லாத அனைத்து அசத்தியக் கொள்கைகளுடனும் சமரசம் செய்துகொள்கின்ற இக்கொள்கை எந்த வகையிலும் சாத்தியமற்றது என்று துணிந்து கூறலாம்.
ஏகத்துவத்தையும் நபிவழியையும் அடிப்படையாகக் கொள்ளாத இன்றைய சில்லறை இயக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்களும் கருத்துக்களும் உள்ளன. எனினும் நாம் வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட ஷீஆக் கொள்கையுடன் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் எவ்வாறு உடன் படுகின்றன ஒத்த பண்புக் கூறுகள் கொண்டுள்ளன என்பதை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அகீதா: ஷீஆக்கள் தங்களது கொள்கையை பகிரங்மாகச் சொல்வதில்லை. தெளிவான கொள்கையும் இல்லை. இதேபோல் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் தூய இறை ஓர்மை வாதம் பற்றி அழுத்தமாகப் பேசவில்லை. புரட்சியில் நம்பிக்கையுள்ள அளவு ஏகத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் ஏகத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் ஷீஆக்கள் போன்று அழுத்தம் கொடுப்பதில்லை. ஷீஆக்கள் தாங்கள் நம்பும் இமாம்களிடம் இறைவன் பேசுவதாகவும் இறைவன் அவர்களின் சிலர் மீது இறங்கி ஊடாடுவதாகவும் நம்புகின்றனர். இதே போன்ற அனைத்திறைவாதக் கொள்கையை குதுப் தனது சூறா இஃலாஸ் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்.
தரீக்கா ஃ சூபித்துவம்: உலகில் தரீக்காக்களைத் தோற்றுவித்து கப்ரு வணக்கங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யூத – கிறிஸ்தவர்கள். ஷீஆ இயக்கம் யூதன் அப்துல்லாஹ் பின் ஸபாவினால் தோற்றுவிக்கப்பட்டது. இன்றுள்ள அனைத்துத் தரீக்காவும் ஷீஆக்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே! மவ்தூதியும் பன்னாவும் ஷீஆ ஆதரவாளர்கள். இருவரும் சூபித்துவ ஈடுபாடு உடையவர்கள். மவ்தூதி எழுதிய கவிதைகளில் சூபித்துவப் பிரதிபலிப்பைக் காண முடிகின்றது.
‘தரீக்காக்களின் சூபி ஷெய்க்மார்கள் தனக்கு செயற்கையாக கப்றுகளைத் தயார் செய்து அதனுள் இறங்கி மறுமை வாழ்வு பற்றிய அச்சத்தை உள்ளத்தில் பதிக்க பயிற்சி வழங்கினர்’ என பன்னாவே கூறியுள்ளார். எனவேதான் இந்த நாட்டிலுள்ள இவர்களின் இயக்கவாதிகள் தரீக்காக்களை இஸ்லாமிய ஆன்மீக தஃவா அமைப்பாக அங்கீகரித்து பகிரங்கமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
தகிய்யா: ஒரு ஷீஆ தனது கொள்கையைப் பகிரங்மாகச் சொல்லவே மாட்டான். தனக்கு மாற்றமான கொள்கை உள்ளவர்களிடம் அவர் கொள்கையை பின்பற்றுபவன் போன்று நடிப்பான். இந்த இயக்கவாதிகளும் இவ்வாறே நடிக்கின்றனர். பர்ளான தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இல்லை என்றிருந்தும் இவர்களிடம் கேட்டால் அப்படியும் – இப்படியும் உள்ளது என்பர். இது வழிகெட்ட ஷீஆக்களின் தரங்கெட்ட வழிமுறை. பன்னா அனைவரையும் திருப்திப் படுத்தி அரசியல் செய்வதற்காக தூய்மையான கொள்கையைப் பலிபீடத்திற்கு அனுப்பினார். இதற்கு ஆதாரமாக அவர் ஏற்படுத்திய ‘ஷீஆ – அஹ்லுஸ்ஸுன்னா ஒருங்கிணைப்பு இயக்கம் உள்ளது. மவ்தூதி அனைத்து ஸஹாபாக்களையும் ‘காபிர் என்ற பல வழிகெட்ட கொள்கைகளை பிரசாரப்படுத்திய ஆயதுல்லாஹ் குமைனியின் ஈரானியப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் அந்த வழிகெட்ட மூடப் புரட்சியை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ‘வாஜிப்’ என்றார்.
மீலாது விழா: இஸ்லாத்தின் எந்த மனிதனின் பிறப்பிற்கோ இறப்பிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. இதற்கு சிறந்த உதாரணமாக ‘ஹிஜ்ரத்’ அமைந்துள்ளது. எனினும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தினர் அவர்களின் இயக்க முக்கியஸ்தர்களின் மண்ணறைக்குச் சென்று மவ்லீது தினங்களில் பாடல் பாடி வருகின்றனர்.
‘ஹிஜ்ரத் நபியவர்களின் பிறப்பு இஸ்ரா மிஃராஜ் முதலிய இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூறும் முகமாக அவற்றுக்கு விழா எடுத்தல் ஃ அனுஷ்டித்தல் ஹராமாக்கப்பட்டுள்ளது’ என யூசுப் கர்ளாவி கூறுகிறார். (மீள்பார்வை ஜுலை 2001 Page04) ‘மீலாத் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது?’ என்று ஆ.யு.ஆ. மன்சூர் பித்அத் ஒன்றுக்கு உயிரூட்ட வழிசொல்லியிருந்தார். மீலாத் தினத்தை உருவாக்கியவர்கள் ஷீஆ ஆட்சியாளர்களான பாதிமியர்கள்.
தவ்ஹீதின் வகைகள்: இறையாட்சியை நிலைநாட்ட வேண்டும் – அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பது கவாரிஜ்களின் கொள்கை. இது ஷீஆக்களிடமும் உண்டு. பன்னா இறையாட்சியை நிலைநாட்டப் போராடுவதாக வாதிட்டார். அதில் நபி வழி இருக்கவில்லை. உலகில் எந்த தூய அறிஞரும் சொல்லாத வகையில் ‘ஹாகிமிய்யத்’ தவ்ஹீதின் நான்காவது வகை அதைப் புறக்கணிப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது என்றார் மவ்தூதி. இதுவும் ஷீஆ வழிமுறையே!
இஸ்லாம் ஒரு புனிதமான பூரணத்துவமான வாழ்க்கை நெறி. அது ஏனைய அனைத்துக் கொள்கை கோட்பாடுகள் சிந்தனைகள் என்பவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதேபோல் அது தெளிவான வழிகாட்டல்களைக் கொண்ட ஒரே மார்க்கமாகவும் உள்ளது.
புனித இஸ்லாத்தின் சிறப்பை மாசுபடுத்துவதற்காக வரலாற்றில் பல வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகள் கொள்கைகள்இகோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதில் ஷீஆக் கொள்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் காற்கூறில் ஈரானில் புரட்சி செய்து குமைனியால் அங்கு ஷீஆ அரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியை இஸ்லாமிய அடைமொழியுடன் பலர் நம் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்களை மட்டுமே வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் அரசுதான் இஸ்லாமிய அரசாக இருக்க முடியும். ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனை அவர்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் நூல்களிலுள்ள செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ் ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
‘(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்) அலி (ரழி) பாதிமா (ரழி) ஹஸன் (ரழி)இஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலி (ரழி) ஆவார்.’ இதில் நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
–(அய்யாஷி தப்ஸீர் Page – 1 Page:128 நூருஸ்ஸகலைன் Page – 1 Page: 238)
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் ‘நபி (ஸல்) அவர்கள் ருகூவு ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது அவர்கள் ‘இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக’ என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
–(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் Page – 1 Page: 226)
அலியின் பொருட்டால் நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.
‘நான் முஸா (அலை) ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்’ என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
–அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1 பக்கம் 261
‘உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங் கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியை சோதித்தான்’ என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
–அல்புர்ஹான் முன்னுரை பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ‘முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ‘ என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அலி’ என்றார்களாம். ‘முஹம்மதே திரும்பிப் பாரும்’ என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
–தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2இ பக்கம் 404
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
–அல் உஸுலுமினல் காபி பக்கம் 258
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
–அல் உஸுலுமினல் காபி பக்கம் 393
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
–மேற்படி நூல் பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும் பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.
–குர்புல் இஸ்னாத் பக்கம் 146
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
–அல் உஸுலுமினல் காபி பாகம் 19 பக்கம் 197
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) ‘வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன்.
நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்’ என்றார்களாம்.
–அல் உஸுலுமினல் காபி பாகம் 1 பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும் பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது ‘முடியுமே’ என்றார்களாம்.
–கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி பாகம் 1 பக்கம் 470
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
‘யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.’ அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
–பஹ்ரானியின் ‘புர்ஹான்’ எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
‘ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்’ என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
–அர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 78
‘ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.’ என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
–அர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 315
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும் கற்கள் மணல்கள் மரங்கள் முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
–உயூனு அக்பாரிர் ரிளா பாகம் 2 பக்கம் 236
‘எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல் எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல் என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்’ என்று அலி (ரழி) கூறினார்களாம்.
–அல்உஸுலுல் காபி பாகம் 1 பக்கம் 197 198.
ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:
பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும் நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில் பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும் பன்னிரெண்டு இமாம்களும் மலக்குகளும் நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
–விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே.
இஸ்லாமி தஹ்ரான் வெளியீடு பக்கம் 58
குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?
அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
–காஷானியின் கிதாபுஸ்ஸாபிஇ பாகம் 1இ பக்கம் 347
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
மிக்தார் இப்னுல் அஸ்வத் அபூதர் அல்கிபாரி ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 245
அபூபக்கரும் உமரும் அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246
(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபிஇ பக்கம் 296
எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
–கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு
இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யூதர்களும்இ கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித் தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.
இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.
ஷீயாக்களிடம் ‘முத்ஆ’ என்றொரு கொள்கை உண்டு. அதாவது சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள் சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.
ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் ‘முத்ஆ’ என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ‘முத்ஆ’ செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்டபோது ‘செய்யலாம்’ என்றாராம்.
–அல்புரூவு மினல் காபி பாகம் 5 பக்கம் 460
இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது ‘ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில் இவர்கள் கூலிக்காரர்கள்’ என்றார்களாம்.
–தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 259
‘ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது’ என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியதுதான்’ என்று பதிலளித்தார்களாம்.
–அல்புரூவு மினல் காபி பாகம் 5 பக்கம் 462
‘மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்’ என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
–தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 256
‘யூத கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்’ என்று அபுல் ஹஸன் (8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)
விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம். (அதே நூல் அதே பக்கம்)
இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்னதான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால் ‘முத்ஆ’ என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித்தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!
விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். (குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292) விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சிதான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத்தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!
சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!
‘ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.’
–அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252
‘யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு’ என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
–அல் இர்ஷாத் பக்கம் 252
அல்லாஹ்வின் தூதர் பெயரால் இதுபோல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ‘வர வேண்டியவர்’ என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். ‘அல் – காயிம்’ என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
‘காயிம்’ வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 1 பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 2 பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைகாரர்களே ஷீயாக்கள். பொய்களையும் கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.
விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள். ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.
இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்! SOURCE     KHAIBARTHALAM 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets