Facebook Twitter RSS

Wednesday, December 26, 2012

Widgets

டெல்லியில் ஓடும் காரில் சிறுமி கறபழிப்பு! – அதிர்ச்சியூட்டும் அடுத்தடுத்த சம்பவங்கள்!



டெல்லி கல்லூரி மாணவி மீதான பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15-ம் தேதி டெல்லிக்கு
கடத்தி வந்து காரில் வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பை பந்த்ராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அவரது கல்லூரி நண்பர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, இன்று காலையில் இறந்தார். கத்தியால் குத்திய அந்த மாணவனும் தற்கொலை செய்துகொண்டான்.
இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் கற்பழிப்பு புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியைஏற்படுத்தியுள்ளது. source asiananban

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets