Facebook Twitter RSS

Monday, January 16, 2012

Widgets

இலங்கை அரசை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்!

JUNE 25, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டம்  மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை 24.06.2011 மாலை 4 மணிக்கு இலங்கை துணைத் தூதரகம் முன்பு நடைபெற்றது. .

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தொடர்ந்து இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஆகவே இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets