Facebook Twitter RSS

Tuesday, January 15, 2013

Widgets

அதிர்ச்சியும் அதிசயமும் நிறைந்த திருக்குரான் நூலகம்



அதிர்ச்சியும் அதிசயமும் நிறைந்த திருக்குரான் நூலகம் 


இஃது டெஹ்ரடூன் இந்தியா எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கின்றது. இந்த நூலகத்தின் பெயர் தாஸ்மியா நூல்நிலையம்.Tasmia Library.
இதில் பல அதிசயமான திருக்குர்ஆன் பிரதிகள் இருக்கின்றன.
1907 ஆம் ஆண்டில் 7 வண்ணங்களில் எழுத்துக்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதி திருக்குர்ஆன் ஒன்று வெளியிடப்பட்டது. 7 வண்ணங்களில் வெளிவந்த முதல் திருக்குர்ஆன் பிரதி இதுதான்.
இஃது வெளியிடப்பட்ட இடம் லூதியானா. இதனை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அமீர் அப்துல்லாஹ் கான்பகதூர் அவர்கள் தாம் வெளியிட்டார்கள்.
இங்கே உலோகத்தாலான ஓர் உருண்டை இருக்கின்றது. அதில் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த உலக உருண்டை மன்னர் அப்துல்லாஹ் கான் பகதூர் அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானதாக இருந்தது. காரணம் அவரது ஆட்சியின் எல்லை முகலாய மன்னர்களின் ஆட்சியின் எல்லையை விட விரிந்து பரந்து இருந்தது.
இங்கே ஒரு திருக்குர்ஆன் பிரதி மிகவும் சின்னதாக இருக்கின்றது. சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம்.
இன்னொரு பிரதி ஒரு கரும்பலகை அளவுக்கு அகல நீளங்களை உடைய பக்கங்களை கொண்டது.
ஒரு திருக்குர்ஆன் பிரதியில் ஒரு காகிதத்தின் எடை 2 கிராம் மற்றொரு பிரதியில் ஒரு காகித்தின் எடை 4 கிலோ கிராம். அது துத்தநாகத்தால் ஆன திருக்குர்ஆன் பிரதி. துத்தநாகத தட்டில் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும் இந்த திருக்குர்ஆன் பிரதியின் மொத்த எடை 21.2 குவிண்டால்.
மிகவும் ஆச்சர்யப்படத்தக்க திருக்குர்ஆன் பிரதி ஒன்று இந்த நூல் நிலையத்தில் இருக்கிறது. அதில் நறுமணம் எப்பொழுதும் கமழ்ந்து கொண்டே இருக்கும். இதன் எவ்வொரு பக்கத்திலிருந்தும் இந்த நறுமணம் வருகின்றது.
இதில் இன்னும் அனைவரின் புருவத்தையும் அகலவிரியச் செய்யும் விஷயம் என்னவென்றால் இந்தத் திருக்குர்ஆன் பிரதி கடந்த 64 அறுபத்து நான்கு ஆண்டுகளாக அங்கே இருக்கின்றது. எனினும் அதிலிருந்து வரும் நறுமனம் சற்றும் குறைந்திடவில்லை.
அதேபோல் திருக்குர்ஆன் வசனங்கள் தென்னைமர ஓலைகள், மரம், உலோகங்கள், துணிகள், ஆட்டுத்தோல்கள், ஒட்டகைத் தோல், மான்தோல், குதிரைத்தோல், மீன் தோல் இவற்றின் மேலும் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல மொழிகளில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் அங்கே உள்ளன. 
உலக மகா அறிஞர்கள் எழுதிய திருக்குர்ஆன் விளக்க உரைகளும் அங்கே அணிகலன்கலாய் அமர்ந்தள்ளன. ஒரு திருக்குர்ஆன் பிரதி இருக்கின்றது அதைத்தொட்டுப்பார்வையற்றோரும் ஓதலாம். (Brailli Print)
விதம் விதமான முசல்லாக்கள் இன்னொரு பகுதியை அலங்கரிக்கின்றன. பல வகை தொப்பிகள் பல பொருள்களில் தோல்களில் கோர்க்கப்பட்ட தொப்பிகள் இவையும் இங்கே இடம் பெறுகின்றன.
சென்ட் இதர வாசனைப் பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் இடம் பெறும் பொருட்கள் spices  வேர்கள் மரங்களின் பகுதிகள் இன்னும் இது போல் திருக்குர்ஆனில் இடம் பெறும் பொருட்கள் இவையெல்லாம் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டி Peepal Tree Wooden Box என்று செய்யப்பட்டது. இந்தப் பெட்டியைச் சுற்றியும் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருக்கும்.
இவையெல்லாம் நீண்ட நெடும் நாள்களாக மக்கள் பார்வைக்கு வராமலிருந்தன. ஆனால் 2005 ஆம் ஆண்டு முதல் திருக்குர்ஆன் மஜீத் எழுத்துகலை வரைவுகளில் Quran Majeed in the light of the Art of Calligraphy என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடத்தப்படுகின்றது.
இந்த கண்காட்சி ரமழான் மாதத்தில் நடத்தப்படுகின்றது. இந்த வருடம் இந்த கண்காட்சியை உத்திரகான்ட் கவர்னர் அஜீஸ் குறைஷி தொடங்கி வைதத்தார். 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets