Facebook Twitter RSS

Tuesday, January 01, 2013

Widgets

மாவீரன் அலெக்சாண்டர் :

மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.356 முதல் 323 வரைமாமன்னன் அலெக்சாண்டர் மாசிடோனியா நாட்டின் தலைநகரான பெல்லா (pella) என்ற இடத்தில் 2 ஆம் பிலிப்ஸ் மன்னருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை மிகுந்த மதிநுட்பமும் வீரமும், முயற்சியும் மிக்கவர். எனவே, அவர் தனது மகனை அறிவிலும் _ ஆற்றலிலும், மெய் ஞானத்திலும், தன்னம்பிக்கையிலும் சிறந்த ஒரு துடிப்புள்ள இளைஞனாக்க விரும்பினார். அலெக்-சாண்டருக்குப் பதிமூன்று ஆண்டுகள் நிரம்பியதும் 2ஆம் பிலிப்ஸ் மன்னர் தன் மகனைத் தக்க ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்படி, இவருக்கு ஆசிரியராக அமைந்தவர்தான், மாபெரும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். அரிஸ்டாட்டில் தம்மிடம் கல்வி கற்க விரும்பிய மாணவர்களுக்கு அறிவியல், அரசியல், தத்துவம், தர்க்கவியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளைக் கற்றுத் தந்தார். இளவயதிலேயே தந்தையின் குறிக்கோளையும், மாசிடோனிய அரசை உலகில் மிகப்பெரிய அரசாக மாற்ற எண்ணி அவர் பல வெற்றிகளை ஈட்டியதையும் கண்டு ஊக்கம் பெற்றார்.

அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.

ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.

அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.

அலெக்சாண்டரின் அவா

இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.

நட்பின் இலக்கணம்

அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?

மன்னிக்கும் மாண்பு

ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.

உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!

பொன் வேண்டுமா?

ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.

முடிவுரை

எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.

அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.
ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.
அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.
அலெக்சாண்டரின் அவா
இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.
நட்பின் இலக்கணம்
அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?
மன்னிக்கும் மாண்பு
ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.
உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!
பொன் வேண்டுமா?
ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை
எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.
அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.
ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.
அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.
அலெக்சாண்டரின் அவா
இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.
நட்பின் இலக்கணம்
அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?
மன்னிக்கும் மாண்பு
ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.
உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!
பொன் வேண்டுமா?
ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை
எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets