![](http://www.madawalanews.com/sites/default/files/styles/large/public/field/image/ahmed.jpg)
இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும்
ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர்
தொடுக்கப்படுமானால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று
ஈரானின் இராணுவத்துறை அமைச்சர் ஜெனரல் அஹம்மது வதீதி எச்சரித்துள்ளார்.
"எங்களைத் தாக்கி அழித்துவிடலாம்
என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள்
நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்."
என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான்
அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.
No comments:
Post a Comment