
இவ்வெற்றி குறித்து கருத்து கூறிய பாண்டே தற்பொழுது சாதாரண பாமரன் பொய்யான கோவில் அரசியலை நம்புவதில்லை என்றும் வளர்ச்சியையும் நல்ல அரசையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
இந்திரா காந்தி காலத்திலிருந்தே காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய அமேதி மற்றும் ராய் பரேலி தொகுதிகளிலும் காங்கிரஸ் இம்முறை மண்ணை கவ்வியுள்ளது. அமேதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 5 சட்டசபை தொகுதிகளில் 2ல் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது.
சோனியா காந்தியின் ராய் பரேலி தொகுதியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பதோடு மூன்று தொகுதிகளில் மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளது. நான்கில் சமாஜ்வாதி கட்சியும் ஒன்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பீஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர்களோடு பிரியங்கா 17 நாட்கள் இத்தொகுதியில் மட்டுமே பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment