சர்கோசி பேசும் போது,
"ஆப்கானிஸ்தானில் எங்கள் வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் தயாராகி வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
thanks to asiananban.blogspot.com




No comments:
Post a Comment