Facebook Twitter RSS

Latest News

Thursday, April 04, 2013

பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?


பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடிக்கும் சமயத்தில், “அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என யார் கூறுகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்




உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

Tuesday, April 02, 2013

தாலிபானை ஒடுக்க இந்தியாவும் சீனாவும் ஓரே அணியில்





என்ன தலைப்பே ஆச்சரியமாய் உள்ளதா?. ஆப்கானிலிருந்து அமெரிக்க 

படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாய் வெளியாகும் 

நெருங்கும் வேளையில் ஆப்கன் மக்களும் அரசும் அதை வரவேற்க, 

ஆப்கனின் அண்மை நாடுகளோ கவலையுடன் அதை பார்த்து 

கொண்டிருக்கின்றன. 

ஆப்கனின் அண்டை நாடுகள் அமெரிக்காவின் வெளியேற்றத்தால் கவலைப்படுவதற்கு காரணம் அமெரிக்காவின் வெளியேற்றம் தாலிபான்களின் எழுச்சிக்கு காரணமாகி விடும் எனும் அச்சமே. அதனாலேயே தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து விட்டு கூட்டணி வைத்து கொள்ள முயல்கின்றன.

Saturday, March 30, 2013

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் ... பகுதி 1




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!


முஸ்லிம் உம்மத்தின் மறுமலர்ச்சிப்பாதை பற்றி 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் இறுதியாக எழுதிய “இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்” என்ற நூல் முக்கியமானது. ஜமால் அப்துல் நாசரின் எகிப்து அரசாங்கம், அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என அவருக்கு எதிராக தயாரித்த குற்றப்பத்திரிகைக்கு இந்நூலிலிருந்தும் சான்றுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் எகிப்து அரசினால் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். ஒரு ஷஹீதின் இறுதி வார்த்தைகளான இந்நூலின் பகுதிகளை உம்மத்தின் மறுமலர்ச்சி நோக்கி இயங்கும் முஸ்லிம்களுக்காக இங்கே தருகிறோம்.

Sunday, March 24, 2013

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!



நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.
இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.
தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

Friday, March 22, 2013

இஸ்லாம் கூறும் தண்ணீரின் தன்மைகள் .....



அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.27:60

Saturday, March 16, 2013

ஆண்களுக்கான விசேஷ உணவு :-



பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.
Blogger Wordpress Gadgets