
Rabaa வில் பல்லாயிரக்கணக்கான எகிப்திய இஹ்வானிய ஆதரவாளர்கள் திரண்டு எகிப்திய இராணுவத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரபாவின் ஜாமியா மஸ்ஜித்தில் இந்த எதிர்ப்பார்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி எகிப்திய இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் இராணுவ நிலையில் முர்ஸியின் படம் பொருந்திய புரட்சிக்கான அழைப்பு போஸ்டரை ஒட்ட முற்பட்ட போதே தலையில் சுடப்பட்டுள்ளார்.