Facebook Twitter RSS

Latest News

Monday, July 30, 2012

QURAN & BIBLE


ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்

E-mail

 ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும் 

கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத் என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு, ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.
முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும். உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் ‘இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின் அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.

முகப்பு செய்திகள் » விமர்சனங்கள் தொடர்கள் » கட்டுரைகள் » மற்றவை » எங்களைப் பற்றி தொடர்புக்கு சுவனத்தில் வாசல்கள் திறக்கின்ற​ன!

சுவனத்தில் வாசல்கள் திறக்கின்ற​ன!
“உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். வளமான மேன்மையான நகரமும் உண்டு; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (சூரா ஸபா:15-வது வசனம்)
சிறந்த மனிதர், சிறந்த சமூகம், சிறந்த தேசம், கருணையான இறைவன் என்ற இஸ்லாத்தின் சித்தாந்தத்தை விவரிக்கும் திருக்குர்ஆன் வசனத்தை தான் மேலே கண்டோம்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் இஸ்லாமிய மார்க்க பாடங்களின் சாராம்சம். மனிதனை சுத்திகரித்து வாழ்க்கையை பரிசுத்தப்படுத்தும் விதமாகவே இஸ்லாத்தில் நம்பிக்கையும், கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் அமைந்துள்ளன.

மஞக்கொல்லை தவ்ஹீத் பள்ளீல் வர்ணம் புசப்பட்டது

பள்ளீயீன் முன்பக்கா சுவர்


பள்ளீயீன் பின்புரம் சுவர்

பள்ளீயீன் ஹவூல்


Friday, July 20, 2012

வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் துவங்கியது! இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை


Mideast nations declare Friday start of Ramadan

துபாய்:இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை பொழியப் போகிறது. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் எகிப்து, ஜோர்டான் நாடுகளிலும் வெள்ளிக்கிழமை புனித ரமலான் மாதம் துவங்கியது.
முஸ்லிம்களுக்கு ஒரு மாத காலம் இறையச்ச பயிற்சியை அளிக்கும் பாவங்களின் இலையுதிர்காலமாகவும், நன்மைகளின் பொற்காலமாகவும் திகழும் மாதம்தான் புனித ரமலான். ரமலானில் அதிகாலையில் இருந்து மாலை சூரிய அஸ்தமிக்கும் வரை நோன்பு நோற்றல், புனித திருக்குர்ஆனை ஓதுதல், இரவு சிறப்பு தொழுகை, பாவ மன்னிப்புக்கோரல், இறைவனிடம் தேவைகளை கேட்டல், தான தர்மங்களை வணங்குதல், பொறுமை, பச்சாதாபம், நல்லிணக்கம், ரமலானின் கடைசி இரவுகளில் வரும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக இஃதிகாப்(மஸ்ஜிதில் தனித்திருத்தல்)  போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ளல் என நன்மைகளின் வசந்தகாலமாக ரமலான் திகழுகிறது.

முர்ஸியுடன் ஃபலஸ்தீன் அதிபர் சந்திப்பு!


Abbas meets Egypt's Mursi in Cairo

கெய்ரோ:எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸியுடன் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபலஸ்தீன்-எகிப்து உறவு, ஃபலஸ்தீன் நல்லிணக்கம், சுதந்திர ஃபலஸ்தீன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அதிபர் தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற முஹம்மது முர்ஸிக்கு வாழ்த்து தெரிவித்த மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தின் பரிபூரண ஆதரவு தங்களுக்கு தேவை என்பதை அவரிடம் தெரிவித்தார். முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் இஸ்ரேல் விவகாரத்தில் தனது நிலைப்பாடு இருக்கும் என முர்ஸி தன்னிடம் உறுதி அளித்ததாக அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Thursday, July 19, 2012

ரமலானை வரவேற்போம்!!!



ரமலானை வரவேற்போம்!!!நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக் கூடியதாகும். அது ஏற்கப்படக் கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத்(ரலி) –ஆதாரம்: முஸ்லிம்)


புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.

ஹமீதா குதுப் மரணம்!


ஹமீதா குதுப்

பாரிஸ்:ஷஹீத் செய்யத் குதுபின் சகோதரியும் பிரபல முஸ்லிம் பெண் மார்க்க அறிஞருமான ஹமீதா குதுப் மரணமடைந்தார். அவருக்கு வயது75. பிரான்சு தலைநகர் பாரிஸில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. பாரிஸில் முஸ்லிம் பெண்களுக்காக மார்க்க உரை நிகழ்த்த வந்த வேளையில் அவரது மரணம் நிகழ்ந்தது.
இஃவானுல் முஸ்லிமீனுக்கும், எகிப்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து 25 -வது வயதில் ஹமீதா குதுபிற்கு  1965-ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
Blogger Wordpress Gadgets