Facebook Twitter RSS

Latest News

Showing posts with label islam. Show all posts
Showing posts with label islam. Show all posts

Saturday, July 07, 2012

ரமளானை வரவேற்போம்!


welcome_ramadan[152x149] ஒரு முறை அலீ (ரலி) அவர்களிடம் தக்வா என்றால் என்ன என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரத்தினச் சுருக்கமாக பதிலளித்தார்கள். இறைவனை அஞ்சுவது, இறைமறை வழி நடப்பது, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருப்பது.
இந்த மாதம் எப்படி குர்ஆனின் மாதமோ அது போன்றே ஈகையின் மாதம். இம்மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் வறியவரின் அன்றாட கஷ்டங்களை நாம் உணர்கின்றோம். எனவே அதனைப் போக்கும் முகமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கும் செல்வத்தை அவர்களுடன் பங்கு வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கொடுப்பது கொண்டு ஒரு போதும் நமது செல்வம் குறைந்துவிடுவதில்லை. மாறாக அதைவிட சிறப்பானதை இறைவன் நமக்கு நல்குவதாக வாக்களிக்கின்றான்.
நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம்.

Sunday, July 01, 2012

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 1

media
முஸ்லிம் தொழிலதிபர்கள் வியாபாரத்திலோ, இன்னபிற தொழில்துறைகளிலோ மட்டும் கவனம் செலுத்தி வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று சமுதாயத்தில் மிகப் பலமுள்ள மீடியாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லோரையும் எளிதில் சென்றடையக்கூடிய தொலைக்காட்சி ஊடகத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தொழில்துறைகளில் உடனே ஈட்டும் லாபம் மாதிரி மீடியா உலகில் ஈட்ட முடியாது என்றறிந்திருந்தும், அது பிரபலமாகி சூடுபிடிக்கும் வரை காத்திருக்கவேண்டும் என்றறிந்திருந்தும் காலத்தின் தேவையறிந்து பெரும் மூலதனத்தை இதில் கொட்டியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தில் எற்படவிருக்கம் பிரகாசத்தை இப்போதே காட்டுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10




அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10
‏ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ أَبُو النَّضْرِ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ نُهِينَا أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ فَكَانَ يُعْجِبُنَا أَنْ يَجِيءَ الرَّجُلُ مِنْ أَهْلِ الْبَادِيَةِ الْعَاقِلُ فَيَسْأَلَهُ وَنَحْنُ نَسْمَعُ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقَالَ يَا مُحَمَّدُ أَتَانَا رَسُولُكَ فَزَعَمَ لَنَا أَنَّكَ تَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَكَ قَالَ صَدَقَ قَالَ فَمَنْ خَلَقَ السَّمَاءَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ خَلَقَ الأرْضَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ نَصَبَ هَذِهِ الْجِبَالَ وَجَعَلَ فِيهَا مَا جَعَلَ قَالَ اللَّهُ قَالَ فَبِالَّذِي خَلَقَ السَّمَاءَ وَخَلَقَ الأرْضَ وَنَصَبَ هَذِهِ الْجِبَالَ آللَّهُ أَرْسَلَكَ قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِنَا وَلَيْلَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا زَكَاةً فِي أَمْوَالِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا صَوْمَ شَهْرِ رَمَضَانَ فِي سَنَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا حَجَّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا قَالَ صَدَقَ قَالَ ثُمَّ وَلَّى قَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لا أَزِيدُ عَلَيْهِنَّ وَلا أَنْقُصُ مِنْهُنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ صَدَقَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்கத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) விபரமான கிராமத்தார் யாரேனும் ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்களின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, "முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து அல்லாஹ் உங்களை(த் தூதராக) அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் "உண்மைதான்" என்று கூறினார்கள்.

சிறப்பு பயான்

சகொதரர் மௌலவி   உமர் அலி ஃபிர்த்வ்ஸ்ஸி

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்...} மஞக்கொல்லை தொவ்ஹித் பள்ளீவாசலில் இன்றூ {01.07.2012} மஹரிப்க்கு பிறகு சகொதரர் மௌலவி   உமர் அலி ஃபிர்த்வ்ஸ்ஸி {முதல்வர் ,ரியாலுஸ் இஸ்ஸாமிய மகளிர் கலலூரி ,கோவை }தலைப்பு {படைத்தவனை வணங்குவோம்}  என்ற த்லைப்பில் சிறப்பு பயான் நடைபெற்றது.

Monday, June 25, 2012

டாக்டர்.மு​ஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு! – மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து!

Celebrations in Egypt as Mursi wins presidency.
கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் கமிஷனின் தலைமையகத்தில் எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.
முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

Sunday, January 29, 2012

கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது.






கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதி ஆப்கானிஸ்தானில்உருவாக்கப்பட்டுள்ளது.இப் புனித அல்குர்ஆன் பிரதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு செவ்வாய்கிழமையன்று ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நடைபெற்றது.  கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதியானது, ஆப்கானிஸ்தானின் உயர்நிலை அரச அதிகாரிகள்,இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.இதன் போது ஹாகீம் நாஸிர் குஸ்ரேவ் கலாச்சார நிலையம் மற்றும் குராஸான் நகரின் வரலாற்றைக் கூறும் ஓவியக்கண்காட்சியை திறக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆனை உருவாக்குவதற்கான நிதி மற்றும் அனுசரனை ஆப்கானிஸ்தானின் கொடைவள்ளல் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.இப்புனித அல்குர்ஆனின் சித்திர மற்றும் வர்ண வேலைப்பாடுகள் செய்துமுடிக்கஏறத்தாள 5வருடங்கள் சென்றன.இப்புனித நூலின் வர்ணவேலைப்பாடுகள் பிரசித்தபெற்ற ஓவியர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய அல்குர்ஆனை உருவாக்கும் வேலைதிட்டம்2004செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு 2009செப்டம்பர் மாதம் நிறைவுபெற்றது.அட்டைகள் உருவாக்கல் மற்றும் காப்பகம் செய்தல் என்பவற்றுக்கு குறைந்தது இரு வருடங்கள் சென்றுள்ளன. இப்புனித அல்குர்ஆனானது 218 பக்கங்களைக்கொண்டுள்ளது. இப்புனித நூலானானது 228சென்றிமீற்றர் நீளத்தையும்,155சென்றிமீற்றர்
அகலத்தையும் கொண்டது.மேலும் இப்புனித அல்குர்ஆன் பிரதியின் 30 ஜூஸ்களும்30வெவ்வேறு வடிமைப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.


முகப்பு செய்திகள்அறிவியல்சிறப்பு கட்டுரைகள்இஸ்லாமியப்பாடல்கள்இஸ்லாமிய அறிஞர்கள் கலாசாரம் அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடு எகிப்தில் நடைபெறவுள்ளது.






புனித அல்குர்ஆன் கற்பதில் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடொன்றை
எகிப்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எகிப்தின் சனத்தெகை மற்றும்உதவி ஆணைக்குழுவின் மேற்பார்வையில் உலக குர்ஆன் ஞாபக மன்றம் மற்றும்முஸ்லிம் இளைஞர் உலக மன்றம் என்பன இணைந்து இம்மாநாட்டை நடாத்தவுள்ளது.  குர்ஆன் மனனமிட்டவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய மாநாடுநடைபெறவுள்ளது. எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தினதும் உலக குர்ஆன் ஞாபக மன்றத்தினதும் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்குக் கொண்டிருக்கும் 80நாடுகளைச் சோந்த மாணவர்கள்,இம்மாநாட்டில் அல்குர்ஆன் கல்விகற்பதில் ஏற்படும் தடைகளை கலந்துரையாடல்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்காக வழிமுறைகள் முன்மொழிவு பற்றிய அறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிக்கவுள்ளது.
 
Blogger Wordpress Gadgets