Facebook Twitter RSS

Latest News

Showing posts with label ஆசிரியர் சிந்தனை. Show all posts
Showing posts with label ஆசிரியர் சிந்தனை. Show all posts

Friday, January 18, 2013

உண்மையை உணர மறுக்கும் அறிவு ஜீவிகள் !!!!

              சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும் ,பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு  ஆளாவதையும் செய்திதாள்கள் வழியாகவும் ,தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம் .
              பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதற்கும் ,இருக்க    ,இருக்க  இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும்  அவர்கள் அணியக்கூடிய கவர்ச்சியான ஆடைகள் தான் 99 சதவிதம் காரணம் என்பதை அறிவுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள் .ஆனால் இந்த உண்மையான ஆட்சியாளர்களும்  ,அறிவுஜீவிகளும் ,பெண்ணுரிமை பேசக்கூடியவர்களும்  உணர மறுப்பதுதான் வேதனையிலும்  வேதனை .
                பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குரிய காரணங்களை தற்போதுதான் மிகமிக தாமதமாக காலம் கடந்துவிட்ட பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு தரப்பினராக உணர்த்துவங்கிவுள்ளனர் .
  இந்திய நாட்டில் உள்ள அணைத்து பெண்களும் பர்தா அணிய மதுரை ஆதினம் வேண்டுக்கோள் :
                 நடந்த 29.12. 12    அன்று  பத்திரிக்கையாளர்களுக்கு  மதுரை ஆதினமாக உள்ள அருணகிரிநாதர் ஒரு  பேட்டியளித்தார் .அந்த பேட்டியில் அவர் ,"இஸ்லாமிய  பெண்கள் பர்தா அணிவது வழக்கம் .கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டுவிடக் கூடாது  என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர் .இஸ்லாமிய பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும் ,தொல்லைகளுக்கு ஆளாகாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் ,ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப  வேண்டுமென்றால்  அனைத்து  பெண்களும் பர்தா அணிய வேண்டும் .அப்பொழுதுதான் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும் "என்று கூறிவுள்ளார் . பெண்களது அரைகுறையான கவர்ச்சி ஆடைகள்தான் ஆண்களை தவறு செய்யத் தூண்டுகின்றது என்ற உண்மையை மதுரை ஆதினம் கூறி அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வுதான்  சரியானது என்று கூறியது தான் தாமதம் .உடனடியாக ஆதனம் கூறிய இந்தக் கருத்தைக் கண்டித்துக் மதுரையில் 30.12.12 அன்று மதுரை ஆதின மடத்தை பெண்கள் அமைப்புகள் முற்றுகையிட்டு  அந்த அமைப்பைச் சேர்ந்த 50பேர் கைதாகிவுள்ளனர் .
     "நான் சொன்னது சரிதான் "  -மதுரை ஆதினம் 
                      தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் ,அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் ,பெண்கள் அமைப்பிடம் மனினிபெல்லாம் கேட்க முடியாது என்றும் ,"நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராக பேசவில்லை ;நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது .அதனை பெற்றோர்களும் ,பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் :தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன் ;எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும் ;நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் "என்று  அவர் உறுதிபடச்  தெரிவித்துள்ளார் .      
                      


Monday, January 07, 2013

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!


இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.



விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்..........

Tuesday, December 18, 2012

PART2;அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்



இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ;

அதே "யூஸ்ஏ  டுடே " பத்திரிகை இஸ்லாத்தின் இந்த வேகமான வளர்ச்சிக்கு 9/11 என்று அடையாளப்படுதப்படும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னணியில் நடந்த சதியும்  உண்மையை அறிந்த அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்திட தொடங்கியதும் முக்கிய காரணங்களாகும் 9/11க்கு பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் .9/11 இஸ்லாத்தின் வளர்ச்சியை சூடேற்றி விட்டுவிட்டது  என்று கூறுகின்றது .இதனை அந்தப் பத்திரிகையில் இடம் பெற்ற சொற்களால் சொன்னால் MUSLIM GROWTH  HAS BEEN FUELLED BY "9/11" CONVERTS முஸ்லிம்களின் வளர்ச்சி 9/11 ல் எரியூட்டப்பட்டு விட்டது .

Sunday, December 16, 2012

PART:1அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்





SOURCE : வைகறை வெளிச்சம் :

அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்  


  •        அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது .
  •         உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத்  தாக்கி வருகின்றது அமெரிக்கா .ஆனால்  அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதை தடுத்திட முடியவில்லை .
  •         அண்மையில்  அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுதிவுள்ளது .
  •  அந்த ஆய்வினை சுருக்கமாக பார்போம் !
  • அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு  US RELIGION CENSUS என்றோன்று ஆண்டு தோறும் நடைபெருகின்றது   இதனை அமெரிக்காவில் இயங்கும் நாதா அமைப்புகளை நடத்தி வருகின்றன .இதனை   ASSOCIATION   OF STATISTICATION  OF  AMERICAN  RELIGIOUS BODIES  (அமெரிக்க மதங்களின் புள்ளிவிபர கணக்காகயம் )என்ற அமைப்பு முன்னின்று ஏற்பாடு செய்து கொண்டிருகின்றது .
  • இவர்கள் இந்த புள்ளி விவரத்தை (ASSOCIATION OF RELIGION DATA ARCHIVES ) புள்ளி விபர குழுமத்தின் ஆவணக் காப்பகத்தில் வைத்து வருங்கின்றர்கள் .
  • இந்த வருடம் இந்தப் புள்ளிவிபரங்கள் மே ,1,2012 இல் வெளியிடப்பட்டன .
  • இதில் கடந்த பத்து வருடங்க்களாக அதாவது 2000மாவது ஆண்டில் எநதெந்த மதம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற கணக்கை சமர்பித்திருக்கின்றர்கள் .
  • 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் 10லட்சம்  முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் .(1மில்லியன்).
  • 2010ம் ஆண்டில் 20லட்சத்து அறுபது ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருன்றாரகள் .இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பூரவிகக்குட்டிகள்
  • அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 66.77சதவிகிதம் .

Saturday, September 29, 2012

வெற்றிக்குப் பத்து வழிகள்!


நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.

Saturday, February 04, 2012

EN SAMOOGAME ONDRU PADU

என் சமுகமே உனக்கெதிராக ஊடகங்கள், உனைப் பற்றித்தான் நாடகங்கள் தீவிரவாதி என்று கூறத் திரைப்படங்கள் திடீர் குண்டு வெடிப்பில் உனது வரைபடங்கள் உனக்கேதிறாய் வானொலிகள் -அட உன் மேல் தான் வீண் பழிகள். வலை போடும் வலை தளங்கள் , வன்முறைக்கும் நீ தான் படைக்கலங்கள், பார்க்கும் இடமெல்லாம் தாக்குதல்கள் , பாவம் நம் தோழரின் கூக்குரல்கள், யார்க்கும் அறியாத போர்க்குற்றங்கள் யஹூதி நசராவின் வெறியாட்டங்கள், மூர்கத்தனமான முறைகேடுகள், முடங்கிப்போனது நம் நாடுகள். அடிப்பவன் ஏகாதிபதி எதிர்ப்பவன் தீவிரவாதி அடிப்படை வாதிகள் என்ற அடை மொழி வேறு அடிபட்ட பின்னும் எதிர்ப்பில்லை பாரு அரேபியா இன்று அவனது கையில், ஆயில் எல்லாம் அமெரிக்கன் பையில் அணுவை வைத்து மிரட்டுகிறான் ஆயுத பலத்தைத் திரட்டுகிறான் , அடிமை ஆனது நம் சமூகம், அடியில் கிடப்பதும் நம் சமூகம் . ஊடகங்கள் காட்டும் நாடகங்களை நாடுகள் பலவும் நம்புகின்றன விருந்துக்கு அலையும் பருந்துகளாய் வேகமாய்ப்பாயும் எருதுகளாய் உன்னை நோக்கியே படை பட்டாளங்கள் பெட்ரோலுக்காக நமது பெற்றோர்களும் பிள்ளைகளும் கொல்லப்படுகிறார்கள் . இஸ்லாம் அழிக்கபடுகிறது இஸ்லாம் பழிக்கப்படுகிறது விசுவாசியின் மீது வஸ்வாஸ் திணிக்கப்படுகிறது. நாடுகள் நம் கையில் அதிகாரம் அமெரிக்காவில். நியுக்கிளியர் நம் கையில் இருக்கக்கூடாது என்று நியுயார்க் விரும்புகின்றது. வியூகம் நடக்கிறது விபரீதம் நடக்கிறது போர் என்ற ஆபத்தில் சிக்கி போர் ஆடுது நம் சமூகம் யார் தொடுத்த அம்போ இன்று பலியாகுது நம் சமூகம் எரித்துக்கொல்வதே எதிரிகளின் திட்டம் எதிராய் ஆகிறது அனைத்துலகச் சட்டம் சோதனை என்ற பெயராலே உனக்கு எத்தனை சோதனைகள். By kadayanallur hameem

Wednesday, February 01, 2012

100 ரூபாயும், வாட்ச்சும் திருடிய இருவருக்கு 7 ஆண்டு சிறை-கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு !



 கோவை: கோவையில் மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி 100 ரூபாய் பணத்தையும், கைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து கோவை கோர்ட் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைக் கேட்ட பொதுமக்கள், வெறும் 100 ரூபாயைத் திருடியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று வியப்புடன் கேட்டனர். ஆனால் வக்கீல்களோ, சட்டப்படி இது சரியான தண்டனைதான் என்று கூறியுள்ளனர்.

நடந்தது என்ன?
2010ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இரவு சரவணன் என்பவர் செல்வபுரம் முத்துச்சாமி காலனி பகுதியில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தனிமையான ஒரு இடத்தில் வைத்து ராஜேந்திரன் மற்றும் அஸ்கர் அலி ஆகிய இருவரும் மடக்கினர்.

பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த 100 ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து சரவணன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ராஜேந்திரன், அஸ்கர் அலியைப் பிடித்தனர்.

2 வருடமாக நடந்த விசாரணை

இருவர் மீதும் கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை கடந்த 2 வருடமாக இந்த கோர்ட் விசாரித்து வந்தது.

விசாரணையின் இறுதியில் நேற்று தீர்ப்பளித்தார் நீதிபதி ஏகேஏ ரஹ்மான்.

அப்போது இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதைக் கேட்டு கோர்ட்டே ஆடிப் போனது.

இவ்ளோ பெரிய தண்டனையா..

நூறு ரூபாய் பணத்தையும், கைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு ஜட்ஜ் 7 ஆண்டு தண்டனை கொடுத்துள்ளார் என்ற தகவல் பரவியதும் கோர்ட் வளாகமே பரபரப்பானது. கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் சாதாரண திருட்டுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று வியப்புடன் கேட்டனர்.

சரியான தண்டனைதான்-வக்கீல்கள்

இந்த அதிரடித் தீர்ப்பு குறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், இது சரியான தண்டனைதான். நீதிபதி மிகச் சரியான தீர்ப்பை அளித்துள்ளார். அந்த இருவர் மீதும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 392வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த சட்டப் பிரிவின்படி, வழிப்பறிக் குற்றத்தில் ஈடுபடும் நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அதிகபட்சம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இங்கு திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது முக்கியமில்லை. ஒரு ரூபாய் திருடியிருந்தாலும் அதற்கும் கூட இந்த அளவுக்கு பெரிய தண்டனை கொடுக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது. மேலும் கத்தியைக் காட்டி அவர்கள் திருடியுள்ளனர். எனவே இது மிகப் பெரிய குற்றம். எனவேதான் இந்த அளவுக்குப் பெரிய தண்டனையை நீதிபதி கொடுத்துள்ளார் என்றனர்.

கடும் தண்டனையைப் பெற்றுள்ள ராஜேந்திரனும், அஸ்கர் அலியும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னராவது திருந்தி வாழ்ந்தால் சரி...

Monday, January 16, 2012

இந்தியாவின் சொர்க்கபுரியாக மாறும் கூடங்குளம்!

JAN 15: கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த பிரச்னையை தீர்க்க நாடுதழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அது குறித்து தினமலருக்கு  39 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் கூறியுள்ளார். இவரது புரட்டு வாதங்களும் அதற்க்கு பதிலும்.

வாதம் 1: கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 50 முதல் 60 வரையிலான கிராமங்கள் பயன்பெறும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான "புரா' (நகர வசதிகளை கிராமப் பகுதிகளுக்கு அளித்தல்).

பதில்: கல்பாக்கம் அணு மின்நிலையம் தொழிலாளர்கள் முதல் இந்தியா முழுவதும் உள்ள மற்றைய அணு மின்நிலையங்கள் வரை உள்ள தொழிலாளர்கள் நிலை அந்தோ பரிதாபம் என்று இருக்க இவர்கள் கூடங்குளத்தை சொர்க்க பூமியாக ஆக்க போகிறார்களாம்.

வாதம் 2:
கூடங்குளத்தை சுற்றி, 30 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள கிராமங்களை நான்கு வழிச் சாலை மூலம் ஒன்றிணைத்து, அந்தச் சாலையை, திருநெல்வேலி - கன்னியாகுமரியை இணைக்கும் தங்க நாற்கரச் சாலையுடன் சேர்க்க வேண்டும்.

பதில்: இது ஒரு மாய்மாலம், தங்க கடற்கரை சாலையால் யாருக்கு லாபம், இதை கொண்டு பயன் பெறப்போவது எல்லாம் முதலாளிகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களுமே.

வாதம் 3: கூடங்குளத்தை சுற்றி, 30 முதல் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி, அதில் குறைந்தது 10 ஆயிரம் பேருக்காவது நேரடி வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்வரும் தொழில்முனைவோருக்கு, 25 சதவீத மானிய வட்டியுடன் வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

பதில்: அட பாவிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா! கல்பாக்கம் அணுமின் நிலையம் முதல் மற்றைய அணு மின்நிலையங்களின் தொழிலாளிகளை நிரந்தர தொழிலாளிகளாக ஆக்காமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்திருக்கும் நீங்களா? 10ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க போகிறீங்கள்.

அதிலும் தொழில் முனைவோருக்கு 25  சதவீதம் வட்டியில்லா கடனாம் முதலில் விவசாயிகளுக்கும், சிறு தொழில் பண்ணும் வணிகர்களுக்கும் கொடுங்கள். இந்த தொழில் முனைபவர்கள் யார்? பெரும் பணக்காரர்கள் செய்யப்போகும் ஆலை தொழிலுக்கு மானியம், உங்கள் அறிவை தூக்கி குப்பையில் போட.

வாதம் 4: கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மீனவர்களுக்கு உதவும் வகையில், அதிவேகமாக செல்லும் படகுகள், கப்பல் இறங்கு தளம், மீன்பதப்படுத்தும் மையம், மீன்கள் இருப்பும் வைக்கும் மையம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பதில்: அது என்னையா பசுமை வீடுகள். ஐயா அபுல்கலாம் நீங்கள் சொல்ல சொல்ல அப்படியே மெய் சிலிர்கிறது. ஜாதுகோடாவில் யூரோனியம் வெட்டி எடுக்கும்  தொழிலாளிகளுக்கு  இந்த வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தீர்களா இல்லையே. ஏன் கூடன்குளம் மக்கள் மீது இவ்வளவு அக்கறை.

அணு சக்தி தயாரிக்கத்தேவையான யூரோநியத்தை வெட்டியெடுக்கும் தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை ஆனால் கூடங்குளத்தை சொர்க்க பூமியாக மாத்த போறாராம் ஐயா அபுல் கலாம். நம்புங்கள் கூடங்குளத்தை சீக்கிரம் பட்டா போட்டு ஏதாவது ஒரு வெளிநாட்டு கம்பெனிக்கு விற்ப்பார்கள்.

வாதம் 5: கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு, தினமும் குறைந்தது ஒரு கோடி லிட்டர் கொள்ளளவில், சுத்திகரித்த குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பதில்: நல்ல குடிநீர்களை நாசமாக்கி விட்டு சுத்திகரித்த குடிநீர் வழங்க போகிறார்களாம். ஜார்கன்ட் மாநிலம் ஜாதுகோடா பகுதியில் இருந்துதான் பெரும் அளவில் அணு சக்தி தயாரிக்க தேவையான யூரோனியம் வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரோ, உணவோ கிடையாது ஆனால் அதில் பணி புரியும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு 45 கிலோமீட்டர் தொலைவில் இருந்து உணவும் தண்ணீரும் வருகின்றது. இப்படி பாட்ட நல்லவர்கள்தான் இந்திய அரசு துறையினரும், அணுசக்தி துறையினரும்.

வாதம் 6: தேவைப்பட்டால், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியினருக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பேச்சிப்பாறையிலிருந்து குடிநீர் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

பதில்: முதலில் காவரியில் இருந்து தண்ணீர் கொடுங்கடா, முல்லை பெரியாரில் இருந்து தண்ணீர் கொடுங்கடா... பேச்சிப்பாறை தண்ணீரை கொண்டுவர எங்களுக்கு தெரியும்.

வாதம் 7: உலகத்தரம் வாய்ந்த 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கூடங்குளம் பகுதியில் அமைக்க வேண்டும். பரிசோதனை கூட வசதிகள் கொண்ட இரண்டு நடமாடும் (மொபைல்) மருத்துவமனைகளையும் உருவாக்க வேண்டும்.

பதில்: முதலில் அணு சக்தி தாயரிக்க தேவையான மூலகூறான யூரோனியம் வெட்டி எடுக்கப்படும் பகுதிகளில் உள்ள தொழிலாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுங்கள் ஐயா அதற்க்கு அப்புறம் கூடங்குளத்தை பற்றி பேசலாம். அறிவை  மொத்த குத்தகை எடுத்த மன்மோகன் சிங்கும், அபுல்கலாமும் இந்தியாவை விட்டே ஓடி விடுங்கள்.  இல்லையில் மக்கள் உங்களை துரத்தி அடிப்பார்கள்.

வாதம் 8: கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமத்தின் குழந்தைகள் சிறந்த கல்வி பெற, விடுதிகளுடன் கூடிய மத்திய, மாநில அரசு பாடத்திட்டத்தில் இயங்கும் உயர்தர கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் அமைக்க வேண்டும்.

பதில்: ஏற்கனவே நீங்கள் கொடுத்த வாக்குகள் எல்லாம் அப்படியே நிறைவேற்றி கிளிச்சிடீன்கள். முதலில் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் அப்புறமா கூடங்குளம் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுக்கலாம். நீயே உலக வங்கியிடம் பிட்சை எடுக்கிறே உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.

வாதம் 9: அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் மற்றும் அகண்ட அலைவரிசை வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பதில்:  இந்த வசதிகள் யாருக்கு தேவை. அந்த மக்கள் தினம் தினம் கடலுக்கு போகி ஒரு வேலை சோற்றுக்கு மாரடிக்கிறார்கள் இவர்கள் என்ன வென்றால் பிராட் பேன்ட் வசதி செய்யப்போகிறாராம். யாருக்கு உங்கள் அந்நிய முதலாளிகளுக்கா.

வாதம் 10: ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இளைஞர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, கூடங்குளம் நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போதிய உயர் கல்வி அளித்து அவர்களை பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டும்.

பதில்:  ஐயா... சாமி போதும் நிறுத்துங்கள்!  உங்களது அன்பு மழையில் நினைந்து எங்களுக்கு எல்லாம் ஜலதோஷம் வந்திருச்சி. மக்களை கொன்று வல்லரசு பட்டம் பெற துடிக்கும் மூடர்களையும், மதவாதம் பேசி கலவரங்கள் உண்டாக்கும் வந்தேரிகளையும் , நாட்டை பொரளாதார மேன்படுத்த போகிறேன் என்று சொல்லி அந்நியர்களுக்கு கூறுபோட்டு கொடுக்க நினைக்கும் கயவர்களையும் இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டும்.
Blogger Wordpress Gadgets