Facebook Twitter RSS

Latest News

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, April 04, 2013

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்




உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

Saturday, March 30, 2013

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் ... பகுதி 1




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!


முஸ்லிம் உம்மத்தின் மறுமலர்ச்சிப்பாதை பற்றி 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் இறுதியாக எழுதிய “இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்” என்ற நூல் முக்கியமானது. ஜமால் அப்துல் நாசரின் எகிப்து அரசாங்கம், அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என அவருக்கு எதிராக தயாரித்த குற்றப்பத்திரிகைக்கு இந்நூலிலிருந்தும் சான்றுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் எகிப்து அரசினால் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். ஒரு ஷஹீதின் இறுதி வார்த்தைகளான இந்நூலின் பகுதிகளை உம்மத்தின் மறுமலர்ச்சி நோக்கி இயங்கும் முஸ்லிம்களுக்காக இங்கே தருகிறோம்.

Monday, March 04, 2013

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 89 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை


முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம்3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 87 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. இறுதியாக துருக்கியில் இஸ்லாமியசாம் ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி.முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .

கிலாஃபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும்,முஸ்லிம் உலகிலே அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரிய அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டு மொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உலகம் பொருளாதார பலமற்றதாக, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிறுசிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மா இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும்,கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல்,பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசங்களாக மாறிவிட்டது.

 முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குஃப்பார்களின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள்,பிரான்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள்,அமெரிக்கர்கள், செர்பியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும்,படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண் முன் பலஸ்தீனம்,ஈராக்,ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா,பொஸ்னியா,அரிட்ரியா போன்ற பூமிகளின் கொடூரமான நிலவரத்தி னைநிலைநிறுத்திப் பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தேசியவாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது. தேசியவாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உம்மத்தின் முதுகில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அழிக்கபட்ட கிலாஃபா உலகில் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை முஸ்லிம் உம்மா கட்டியம் கூறுகிறது.

‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஆல இம்றான்: 193

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய அரசு எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) முஸ்தபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாஃபா வீழ்த்தப்பட்ட இந்த காலகட்டத்தில் கிலாஃபா அரசு பலகீனமடைந்திருந்ததுடன் சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப் போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத்தொடங்கியிருந்தபோது முஸ்லிம்களின் அடிப்படையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாஃபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாச்சாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலைகள்,வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் தந்திரமாக கல்வியியல் விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாகசெலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.

வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாஃபத்தின் கட்டமைப்பும் அதன் அஸ்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. காபிர்களுக்கு தமது சிந்தனைகளை இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கிலாஃபத்தின் இந்த வீழ்ச்சியில் குஃப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாஃபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குஃப்ர் அரசுகள் கிலாஃபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.

அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர்.பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்தினையும், கிலாஃபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள்ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிபரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை செலுத்த யோசித்தனர்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரியதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் வீழ்ச்சியும் நடந்தேறியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகாரப் பூர்வமாக கிலாஃபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி,மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாஃபத்திற்கெதிரான இந்த சதி முயற்சிக்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிஃப் ஹசைன்-( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தான்
இவ்வாறு கிலாஃபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காஃபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாஃபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லிம்களை கடுமையாக தண்டித்தனர்.

இவ்வாறாக காஃபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைக்கல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் . (4:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமதுபாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)


விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)

விசுவாசிகளே! உங்களையன்றி இறைநிராகரிப்போரை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும்,நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)

Friday, February 22, 2013

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!


இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
 செங்கம் எஸ்.அன்வர்ஷா
o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி!
o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!
o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!
"லோக்பால்" மசோதாவில் பிரதம மந்திரியையும் விசாரிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டுமெண்று இன்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனும் உண்மையை எவரும் கண்டுகொள்ள முடியும்.
இஸ்லாத்தில் நீதிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களும் அச்சமின்றி நீதிமன்றத்தை அணுகி, எளிதில் சட்டப்படி தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண குடிமகன் கூட நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்! அதை கலீஃபாவும் குற்றமாக கருதியதில்லை. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில், பொன்னெழுத்துக்களில் பதிய வைத்துள்ள பல நிகழ்ச்சிகளை இன்றும் உலகம் வியந்து பாராட்டுகிறது.
இஸ்லாமிய ஆட்சியில் கலீஃபாக்களும், பேரர்சர்களும் கட்டிக்காத்த நீதித்துறை தன் கடமையை குறைவின்றி செயலாற்றி வந்தது. நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட்டு, குர்ஆனின் கட்டளைகளையும், சுன்னத் வழிமுறைகளையும் கவனத்துடன் பின்பற்றி தீர்ப்புகளை வழங்கினர். அவற்றில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்வது அவசியமில்லையா?!

o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி :
முதலாம் கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. கூஃபாவில் வசித்து வந்த "ஜமீலா" என்னும் பெண்ணை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணம் முடித்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் "ஆஸிம்" என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தவிற்க முடியாத சில காரணங்களினால், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஜமீலா அவர்களை விவாகரத்து செய்து விட்டார்கள். அதன் பிறகு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மதீனா மாநகருக்கு குடியேறி விட்டார்கள். ஜமீலா அவர்கள் தன்னுடைய மகன் ஆஸிமுடன் கூஃபாவில் தங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கூஃபாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, எதேச்சையாக தன் மகன் ஆஸிமை அங்கு பார்க்க நேர்ந்தது. பாச மிகுதியால் தன் குழந்தையை வாரி அணைத்து தன் குதிரையின் மீது தூக்கி உட்கார வைத்துக் கொண்டார்கள். தன்னுடைய குழந்தையை மதீனாவுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்கள்.
செய்தி அறிந்த ஜமீலா அவர்கள் ஓடோடி அங்கு வந்து, ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எக்காரணத்தைக்கொண்டும் தன் குழந்தையை அனுப்புவதற்கு மறுத்ததுடன், தன் குழந்தையை அவரிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ள முயற்சித்தார்கள். பாசப்பிணைப்பில் இருவரும் உறுதியாக இருந்ததால் வாக்குவாதம் முற்றி பிரச்சனை, அன்றைய கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றுவிட்டது.
குழந்தை ஆஸிமின் இளம் வயதினை கருத்தில் கொண்டு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக "குழந்தை அதன் தாயாருடன் தான் இருக்க வேண்டும்" என்று கலீஃபா அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள். தீர்ப்பை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை :
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்தின் கவர்னராக இருந்தார். கிறிஸ்தவர் ஒருவர், எகிப்தின் கவர்னரின் மகனுக்கு எதிராக, மதீனாவில் இருந்த அமீருல் முஃமினீன், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடர்ந்தார்.
"கவர்னருடைய மகன் சாட்டையினால் தன்னுடைய முதுகுத்தோல் உரியும் அளவுக்கு அடித்து துன்புறுத்தினார். நீதி கேட்டு தங்களிடம் முறையீடு செய்ய வந்துள்ளேன்" என்று அந்த கிறிஸ்தவர் முறையிட்டார்.
"உம்மை எதற்காக அவர் அடித்தார்?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, "எகிப்து நகரின் வெளியில் குதிரை சவாரி பந்தயம் நடந்தது. இதில் என்னுடைய குதிரை வேகமாக ஓடி கவர்னரின் மகன் சவாரி செய்த குதிரையை பின்னடையச்செய்து வெற்றி பெற்று விட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத கவர்னரின் மகன், என்னை சாட்டையினால் தாக்கினார்" என்று பதிலளித்த கிறிஸ்தவர், தன் சட்டையினைத்தூக்கி, காயம்பட்ட இடத்தைக் காட்டினார்.
இதைக்கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கோபத்துடன், "உமக்கு நீதி கிடைக்காதவரை, நான் வேறு எந்த வேலையையும் செய்யப்போவதில்லை" என்று உறுதியளித்தார்கள்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய பணியாளர், முஹம்ம்து பின் முஸல்லமாவிடம் அவசரக் கடிதம் கொடுத்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதில், "எகிப்தின் கவர்னர், உடனடியாக மதீனாவுக்கு வரவேண்டும். ஒரு ஏழையின் உடலை கசையடியால் சல்லடையாக்கிய தங்கள் மகனையும் தங்களுடன் அழைத்து வரவும்" என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கடிதம் கிடைத்ததும், எகிப்தின் கவர்னரும், அவருடைய மகனும் உடனடியாக மதீனா மாநகரம் வந்து கலீஃபா முன் ஆஜரானார்கள்.
கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிறிஸ்தவரையும் அங்கு வரவழைத்து, மூவரையும் கூண்டில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். கலீஃபா அவர்கள், கிறிஸ்தவரை நோக்கி "நீங்கள் சுமத்தும் குற்றத்தை விளக்கமாகக் கூறவும்" என்று கூற உடனே அந்த கிறிஸ்தவர் குதிரை சவாரியின்போது நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்.
இதனைக் கேட்ட கவர்னரின் மகன் தலை தொங்கியபடியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியடைந்த கவர்னர் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய சாட்டையை எடுத்து ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீட்டியபடியே, "அமீருல் முஃமினீன் அவர்களே! என்னுடைய சாட்டையினால் என் மகனுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டுங்கள்" என்று உணர்ச்சிபொங்க கேட்டுக்கொண்டார்.
அதற்கு கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமது சாட்டையைக் கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டியிருந்தால், எகிப்திலேயே தண்டனை வழங்கும்படி செய்திருப்பேன். இப்போது உமது சாட்டைக்கும் அவசியமில்லை, எனது கரங்களுக்கும் வேலையில்லை. எனது சாட்டை, கிறிஸ்தவரின் கரங்களில் இருக்கும். தண்டனை பெறும் உடல் உமது அருமை மகனுடையதாக இருக்கும்!" என்று சொல்லியபடியே, தன்னுடைய சாட்டையை கிறிஸ்தவரிடம் கொடுத்து "அடியுங்கள், உங்களை எப்படி அடித்தாரோ அதைப் போலவே அடியுங்கள். உங்களை எப்படி இழிவு படுத்தினாரோ, அதே விதமாக இன்று அவரை இழிவுபடுத்துங்கள்" என்று அமீருல் முஃமினீன் கட்டளையிட்டார்கள்.
பழியைத் தீர்த்துக்கொள்ள தயாராகிவிட்ட கிறிஸ்தவர், சாட்டையினை தன்னுடைய கையில் பிடித்தபடியே, கவர்னரின் முன் வந்து நின்று கொண்டு, "அவர் என்னை கசையால் அடிக்கும்போது, எனது முதுகில் துணி இன்றி, வெற்று உடம்போடு இருந்தேன்" என்று கூறினார்.
இதைக் கேட்ட எகிப்தின் கவர்னர், உடனே தன் கைகளால், தன் மகனின் துணிகளை அகற்றினார். அதற்குப்பின்னரே அந்த கிறிஸ்தவர் தனது பழியைத் தீர்த்துக்கொண்டார்.
பழிக்குப்பழி தீர்த்துக்கொண்ட அந்த கிறிஸ்தவர், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைகள் கூட நீதியும் நேர்மையும் கொண்டவர்கள் என்று யாரோ ஒருவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. அமீருல் ம்ஃமினீன் அவர்களே! தாங்கள் யாரிடம், அடிமையாக இருந்து இந்த நீதியும் நேர்மையும் கொண்ட புனித பாடத்தை கற்றுக்கொண்டீர்களோ என்னையும் அவருடைய அடிமையாக சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று உணர்ச்சி பொங்க கத்தினார்! அடுத்த நிமிடமே, அந்த கிறிஸ்தவர் இஸ்லாத்தை தழுவி விட்டார்.

o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி :
துருக்கி நாட்டின் சுல்தான்களில், சுல்தான் பாயஜித் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர். அவருடைய ஆட்சியில் ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நீதிபதி பதவியை கண்ணியத்துதுடன் அலங்கரித்து வந்தவர்கள். ஒருநாள், அவர் முன் வந்த வழக்கொன்றில் சுல்தான் பாயஜித் அவர்களே சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. சுல்தான் நீதிமன்றத்திற்கு ஆஜராகி சாட்சிசொல்ல முன்வந்தபோது அவரது சாட்சியத்தை நீதிபதி ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், "தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாதவருடைய சாட்சியம் அவ்வளவு வலுவானதக கருத முடியாது" என்பதுதான்! இதைக் கேட்டு, சுல்தான் பாயஜித் சிறிதும் கோபப்படவில்லை. நீதிபதி தன்னை அவமானப்படுத்தியதாகவும் கருதவில்லை. நீதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இஸ்லாமிய ஆட்சியில் நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாராகத்தான் இருந்திருக்கின்றன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வகுக்கப்பட்ட நீதிநெறிகள், இறையருளால் போற்றி, பாதுகாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக சரித்திரக்குறிப்புகளில் காணலாம்.

''ஏகத்துவ முழக்கம்''

பக்தாதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அடக்கமாகியிருக்கும் இடம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்''
[ o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.
o "அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை"யில் வெற்றி கிடையாது.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
o நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி & ஃபுதூஹுல் ஃகைப்")
''இந்த ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பதை அறிந்தும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவரும் ஆலிம்களும் மதரஸா மாணவர்களும்திருந்துவதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக. வழிகாட்ட வேண்டியவர்களே வழிகெட்டுப் போகும்போது அல்லாஹ்விடம் முறையிடுவதைத்தவிர வேறென்ன வழி?! ஏனெனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.'' -adm.]
  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி  
ஹிஜ்ரி 5 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட சீர்த்திருத்தவதிக்களில் முக்கியமானவர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
ஏகத்துவத்தை, தவ்ஹீதை உலகெங்கும் ஒளி பரப்பிய அவர்களின் போதனைகள் அத்தனையும் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் வாயிலாகவும் இறைநம்பிக்கையை உறுதியுடன் மனதில் இருத்திக்கொள்ள உந்துதல் சக்தியாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஒளிவிளக்காகும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எழுதியுள்ள "ஃபுதூஹுல் ஃகைப்" எனும் நூல் பல உபதேசங்களை அடங்கிய பெட்டகம் என்று சொல்லலாம்.
நாம் செயல்பட இறைவேதமாம் அல்குர் ஆனைத்தவிர வேறு நெறி நூல் ஏதுமில்லை. நாம் பின்பற்றிச்செல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தவிர வேறெந்த நபியுமில்லை. அவ்விரண்டையும் விட்டுவிட்டு வேறெங்கும் சென்றுவிடாதீர்கள். அதைவிட்டு அப்பாற்பட்டு சென்றுவிட்டால் நாசமடைந்து விடுவாய். ஷைத்தானும், மனோஇச்சையும் உன்னை வழிகெடுத்துவிடுவர்.
"அல்குர்ஆன், அல் ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸுக்கு ஒத்திருந்தால் அதனி எடுத்துக்கொள். இல்லையேல் அதனை தூக்கி எறிந்துவிடு. ஏனெனில், "இத்தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரொ அதை வாங்கிக் (எடுத்துக்) கொள்ளுங்கள். எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்." (அல்-குர்ஆன் 59 : 7) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸில்தான் ஈமானுக்கு (இறைநம்பிக்கைக்கு) பாதுகாப்பு இருக்கிறது. இவையிரண்டின் மூலமாகவே ஒரு மனிதன் இறைநேசராக ஆக முடியும்.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை" யில் வெற்றி கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லா ஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், கொடுத்தல்-கொடுக்க மறுத்தல், வாழ்வு-மரணம், மதிப்பு-இழிவு, செல்வம்-வறுமை, இவை யாவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டுமே உள்ளன. (இந்த விபரங்கள் அனைத்தும் அவர்கள் எழுதிய "ஃபுதூஹுல் ஃகைப்" நூலில் அடங்கியுள்ளன.
''அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
''உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே. யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான்.'' (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி)
"அல்லாஹ்வையே வணங்க வேண்டும். வணக்கங்கள் எதுவாயினும் அது அல்லாஹ்விற்கு மட்டுமே. அதில் யாரையும், எதனையும் இணையாக்கிவிடக் கூடாது. அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். துன்பம் - துயரம் ஏற்படும் சமயத்தில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டும். மற்றெல்லஓரையும் விட அல்லாஹ்வே மிக மிக நெருக்கமாக, சமீபமாக இருக்கிறான். அவனே செவிமடுப்பவன். துன்பங்களை நீக்குபவன். நாடியவுடன் எதனையும் செய்பவன். உதவிகள் அல்லாஹ்விடமே கோரப்பட வேண்டும்..." என உபதேசம் செய்த இந்த இறைநேசரை முஸ்லிம்களில் ஒரு சாரார் அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தி வைத்து, அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற வேண்டிய உதவிகளை இவர்களிடம் கேட்கக்கூடிய மோசமான நிலை இன்றும் தொடர்கிறது.
அல்லாஹ்விற்கு மட்டுமே "நேர்ச்சை" எனும் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், சிலர் இவர்களின் பெநேர்ச்சையும் செய்கின்றனர்.
"ஜியாரத்" எனும் பெயரில் இவர்களின் மண்ணறையை (தவாஃப்) சுற்றி வருவது, அங்கே (இஃதிகாஃப்) தங்குவது போன்ற அனாச்சாரங்களை செய்து வருகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும். இது அவர்களின் உபதேசத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 27 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தார்கள். அவர்களில் 5 ஆண் பிள்ளைகளும் 22 பெண் குழந்தைகளும் அடங்குவர். இது அவர்கள் இல்லறத்தை இனிதாக அமைத்து வாழ்ந்ததற்கு உண்மையான சாட்சியாகும்.
தன்னுடைய கடைசி காலம் வரைகல்வியை போதிக்கும் ஆசானாகவே பணியாற்றினார்கள். இறுதியில் பாக்தாதிலேயே மரணமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களின் மண்ணறையை சுவனப்பூங்காவாக ஆக்கிவைப்பானாக. இவர்கள் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ வரவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-மவ்லவி, F. ஜமால் பாகவி

Wednesday, February 20, 2013

சிலுவைப்போர் ஸ்டில் இஸ்லாம் PART -1



சிலுவை என்ன?

அவர்கள் நம்பிக்கை உத்தியோகபூர்வ தேவாலயத்தின் என்று வேறுபட்டன ஏனெனில் சிலுவை heretics எதிராக அல்லது வேறு வார்த்தைகளில், முஸ்லிம்கள் மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபை மூலம் நடுத்தர வயது போது போராடியது. முதல் சிலுவை 1095 இல் போப் Orban இரண்டாவது தொடங்கப்பட்டது. இந்த கிரிஸ்துவர் தேவாலயத்தின் நீண்ட மற்றும் மிக பெரிய சிலுவைப்போர் மற்றும் 200 ஆண்டுகளில், இது முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியம் எதிராக மத்திய கிழக்கு நடைபெற்றது நீடித்தது. வெளிப்படையான நோக்கம் கிரிஸ்துவர் வணங்கப்படும் மற்றும் அவர்களுக்கு யாத்திரை ஒரு இடம் இருந்தது, அது பாலஸ்தீன புனித நிலத்தை எடுத்து இருந்தது. போப் நில இன்ஃபிடல்ஸ் ', அவர்கள் முஸ்லிம்கள் என்று இது கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இன்னும் உள்ளார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை இராணுவ பயம் மற்றும் இஸ்லாமியம் இறுதியில் ஐரோப்பா நுழைய என்று திகில் காரணமாக எப்போதும் விரிவடைந்து இஸ்லாமிய மாநிலம், தாக்க இருந்தது. ஏற்கனவே வியன்னா மற்றும் பிரான்ஸ் வாயில்கள் அடைந்தது, அதனால் சர்ச் தவிர்க்க முடியாமல் அச்சுறுத்தல் உணர்ந்தேன்.

சிலுவைப்போர் காய்ச்சல்

இடைக்காலத்தில் ஐரோப்பா போது முடியாட்சி, மத குருமார்கள் மற்றும் 'குதிரைகள்' கட்டுப்படுத்தப்படும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தின் இருந்தது. இந்த நேரத்தில் ஐரோப்பாவில் தேவாலயத்தில் upmost அதிகாரம் கொண்ட, தேவாலயத்தில் தலைவர் என்ற போப் மிகவும் சக்தி இருந்தது, அதனால் அவர் சமூகத்தில் அரசியல் ஆர்வம் இருந்தது. தேவாலயத்தின் ஆசை பகுதியாக அதன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அங்கு சிலுவை. மத்திய கிழக்கில் இஸ்லாமியம் அழிக்க அழைப்பு நேரத்தில், போப் பைசண்டைன் பேரரசு (கிரேக்கம் மரபுவழி திருச்சபை கட்டுப்படுத்தப்படும்) ரோம் இருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக உதவி கோரி அந்த தேவாலயத்தில் அரசியல் நலன்களை மேலும் முடியும் என்று. சிலுவை அங்கு போராடிய வெற்றி பெற்றது என்றால், அது சர்ச் அரசியல் அதிகாரம் மற்றும் புவியியல் விரிவாக்கம் என்ன என்று.


ஐரோப்பா முழுவதும் "சிலுவைப்போர் ஃபீவர்" மூலம் உறைந்திருந்தது. இராணுவ துணிகர தேவாலயத்தில் வரையப்பட்டது இருந்த இஸ்லாமியம் பற்றிய கூறப்படும் பேய் மற்றும் அறியாமை முகத்தை எதிராக கிறித்துவம் உண்மையை இடையே மோதல் கருதப்பட்டது. இந்த பிரச்சாரம் குர்ஆன் நம்பகத்தன்மையை மற்றும் நபி இரண்டு குறித்துள்ளார் போலிகளிலும் இருந்த முஹம்மது (SAWW), sorcerery, சாத்தான்கள், தீய, மற்றும் பேகன் தாக்கி கொண்டுள்ளது. மேலும், நபி (SAWW) பாலியல் வரைமுறையற்ற மற்றும் கீழ்த்தரமான, ஒரு குடிகாரன், சூதாட்டக்காரர் மற்றும் pimp கருதப்பட்டது. இந்த கேடுகெட்ட புனைதல் இருந்து, சர்ச் ஆனால் தங்கள் அழகை உள்ள, அனைத்து முஸ்லிம்கள் தங்கள் நடத்தையில் மிருகங்கள் போல தான் மட்டும் அங்கு அளவிற்கு, despotic மற்றும் தீய என்று முடித்தார். எனவே மோசம் இந்த குற்றச்சாட்டுகள் இருந்தன, இன்னும் அவர்கள் அன்றியும் மற்றும் மக்கள் வரை lapped இருந்தது, மற்றும் முஸ்லீம் உலகில் தாக்குதல் நியாயம் சேர்க்கப்பட்டது. இந்த அடிப்படையில், குறிப்பாக ஓரியண்டலிஸம் அதன் வளர்ச்சி இருந்து மேற்கு மூலம் இஸ்லாமியம் நீண்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதல், வேர்கள் மாறியது. ஆண்டுகள் கழித்து, சிலுவை பெரும் romanticisation, Chateaulri பொருள் மற்றும் பற்றி எழுத போது சிலுவை எப்படி

"சக்தி அவை தெரியும் மட்டும் இருந்து முஸ்லிம்கள் விடுவிக்க ஒளிமயமான கிரிஸ்துவர் முயற்சி."

இந்த மாறாக முஸ்லிம்கள் விட அறப்போரில் ஒரு படம் முரண்பாடாக துல்லியமாக உள்ளது.

இது திருச்சபை காரணம் ஆதரவை நிதி மற்றும் வலிந்து இழு போதுமான இருந்தது இஸ்லாமியம் மற்றும் முஸ்லிம்கள் மேல் மற்றும் ஒத்த சித்திரங்கள் பயன்படுத்தி பெற்றது என்று மத வெறி; தேவாலய கொஞ்சம் போர் தேவை என்று இராணுவ பெறுவதற்கான கவலை சிலுவை. மேலும் இந்த வெற்றிகரமாக ஒரு பொது எதிரிக்கு எதிராக அணிதிரண்டு ஐரோப்பிய நாடுகளில் மேலும் கிரிஸ்துவர் நிலையை வலுப்படுத்தும் போது வரலாற்றில் முதல் முறை ஒன்று. சர்ச் தான் நித்திய சொர்க்கத்தில் மற்றும் இறப்பு சத்தியம், மற்றும் 'காட்டுமிராண்டி' முஸ்லிம்களின் seething, குருட்டு வெறுப்பு, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து இருந்து குறிப்பாக ஐரோப்பா விட்டு குதிரைகள் மற்றும் விவசாயிகள் ஒரு வெகுஜன வெளியேற்றம், வெற்றி மற்றும் இரக்கமின்றி முஸ்லிம்கள் கொலை மற்றும் ஜெருசலேம் செல்ல இயக்கப்படுகிறது .


Wednesday, January 30, 2013

ஹிஜ்ரி 1342, ரஜப் 28ல் என்ன நடந்தது-?



முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) -ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்கவேண்டும் என்ற இழிநிலை உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாசானில் நடைபெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.



 "முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும்.கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம்" 



கிலாஃபத்தை முழுமையாக அழிப்பதற்கு பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்று உலகமே அறிந்திருந்தது.கிலாபஃத்தை அழித்ததோடு மேற்குலக ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர். ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள். முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும், சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.




 நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறுவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. உண்மையில் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாத்தின் எதிரிகளும் தோன்றிவிட்டார்கள். முஸ்லிம்களுடன் நீண்ட காலம் போராடி தோல்வி கண்ட காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே அவர்கள் சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்களை வீழ்த்த முடியும் என்பதாக உணர்ந்தார்கள்.



முஸ்லிம்களின் சிந்தனையை பலவீனப்படுத்த,கிலாஃபத்தின் இறுதி காலகட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தை தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.இதனை அடைவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளை கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றி பெறமுடியும் என்பதால் , குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும் ,துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.



இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் அழிவும் நடந்தேறியது. முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற இங்கிலாந்தின் அடிவருடி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட உடனேயே முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாத்தின் பூமி பல தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர்.மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர் . அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கினர். 



மேற்குலகின் ஏஜண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் பங்கம் ஏற்ப்பட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , பலஸ்தீன், காஷ்மீர் ,செச்சன்யா,கிழக்கு துர்கிஸ்தான் என்று உல்கின் பலபாகங்களிலும் உள்ள முஸ்லீம்கள் வேட்டையாடப்படுகிண்றனர் . முஸ்லிம் உலகு எல்லா நிலைகளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது.முஸ்லிம் உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.முஸ்லிம் நாடுகளில் இன்று நடைபெற்று வரும் எழிச்சிமிகு போராட்டங்கள் கிலாஃபத்திற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது. 



முஸ்லிம்களே! 

உலக அரங்கில்ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்கவேண்டாமா? இந்த ஆட்சி முறைக்கு கீழ் தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சி முறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமுல்படுத்தப்படுவதன் மூலமாகவே , முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும். முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:



"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141) 


"விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்." (ஆல இம்ரான் :28) 



முஸ்லிம்களே! 


இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது. கிலாஃபத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும்.கிலாஃபத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சனையாக இருப்பதோடு கட்டாயக்கடமையாகவும் இருக்கின்றது. 



 “நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), இப்னு மாஜா) 



முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில், சர்வசாதாரணமாக இன்று முஸ்லிம்களின் கண்ணியமும் பாழ்படுத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். குர்ஆனை எரிக்கும் போராட்டத்தை அமெரிக்காவில் கயவன் ஒருவன் நடத்தியிருக்கிறான். முஸ்லிம் உம்மத்தை கேடயமாக நின்று பாதுகாக்ககூடிய பொறுப்பு மிக்க இமாம்(கலீஃபா) இல்லாததே முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும். நபி(ஸல்) கூறினார்கள்


 "இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள்". (அபூஹ§ரைரா (ரலி), முஸ்லிம்) 


 நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின்னர் இந்த உம்மத்தை யார் வழி நடத்தவேண்டும் என்பதை தெளிவாகவே அறிவித்து சென்றுள்ளார்கள். 


“நான் அபூ ஹ§ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய நபி (ஸல்) அவர்களின் கூற்று: பனிஇஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். அதிக எண்ணிக்கையில் கலீஃபாக்கள் தோன்றுவார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என வினவினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: முதலாமவருக்கு பைஆ செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பைஆ செய்யுங்கள். அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து விசாரணை செய்வான்” என்றார்கள். (அபுஹாசிம் (ரலி), முஸ்லிம்) 



முஸ்லிம்களே! 


நம் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் பொறுப்பை நிறைவேற்ற வீறு கொண்டு எழ வேண்டாமா? நாம் உறுதிப்பிரமாணம் கொண்டு ஏற்று வாங்கிய மாபெரும் அமானிதத்தை நாம் மட்டும் சுமந்து கொண்டிருந்தால் போதுமா? அதன் பிரகாசத்தை அழைப்புப்பணி மூலம் உலகம் முழுதுவதும் பரப்ப இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபா அவசியமல்லவா?முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரங்களிருந்து பிரிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டாமா? முஸ்லிம்கள் மாத்திரமன்றி முழு மனித சமுதாயமும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நிம்மதியாக வாழ நாம் வழி ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டாமா? கடந்த நூற்றாண்டிலும் தற்போதும் மனித சமுதாயம் சந்தித்துள்ள மாபெரும் அழிவுகளுக்கு காரணமான மனித அறிவிலிருந்து தோன்றிய முதலாளித்துவம் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை அடியோடு அகற்றி மீண்டும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டாமா? 



முஸ்லிம்களே! 


நம் பாதை சுவனத்தின் பாதையாகும்.அதன் பாதை இன்னைல்கள் நிறைந்தது. அதை அடைந்து கொள்வதற்கு மாபெரும் தியாகங்கள் செய்வது அவசியமாகும். சஹாபாக்கள் மற்றும் நம் முன்னோர்களின் தியாக உணர்வு நமக்கும் வர வேண்டாமா?அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய சட்டங்கள் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்பட, இந்த அழைப்பு பணியில் ஈடுபடுவோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வோமா?


 "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்." (அல் அன்ஃபால்: 24) 

Tuesday, January 01, 2013

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன்


சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

மாவீரன் அலெக்சாண்டர் :

மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.356 முதல் 323 வரைமாமன்னன் அலெக்சாண்டர் மாசிடோனியா நாட்டின் தலைநகரான பெல்லா (pella) என்ற இடத்தில் 2 ஆம் பிலிப்ஸ் மன்னருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை மிகுந்த மதிநுட்பமும் வீரமும், முயற்சியும் மிக்கவர். எனவே, அவர் தனது மகனை அறிவிலும் _ ஆற்றலிலும், மெய் ஞானத்திலும், தன்னம்பிக்கையிலும் சிறந்த ஒரு துடிப்புள்ள இளைஞனாக்க விரும்பினார். அலெக்-சாண்டருக்குப் பதிமூன்று ஆண்டுகள் நிரம்பியதும் 2ஆம் பிலிப்ஸ் மன்னர் தன் மகனைத் தக்க ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்படி, இவருக்கு ஆசிரியராக அமைந்தவர்தான், மாபெரும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். அரிஸ்டாட்டில் தம்மிடம் கல்வி கற்க விரும்பிய மாணவர்களுக்கு அறிவியல், அரசியல், தத்துவம், தர்க்கவியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளைக் கற்றுத் தந்தார். இளவயதிலேயே தந்தையின் குறிக்கோளையும், மாசிடோனிய அரசை உலகில் மிகப்பெரிய அரசாக மாற்ற எண்ணி அவர் பல வெற்றிகளை ஈட்டியதையும் கண்டு ஊக்கம் பெற்றார்.

அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.

ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.

அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.

அலெக்சாண்டரின் அவா

இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.

நட்பின் இலக்கணம்

அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?

மன்னிக்கும் மாண்பு

ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.

உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!

பொன் வேண்டுமா?

ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.

முடிவுரை

எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.

அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.
ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.
அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.
அலெக்சாண்டரின் அவா
இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.
நட்பின் இலக்கணம்
அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?
மன்னிக்கும் மாண்பு
ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.
உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!
பொன் வேண்டுமா?
ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை
எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.
அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.
ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.
அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.
அலெக்சாண்டரின் அவா
இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.
நட்பின் இலக்கணம்
அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?
மன்னிக்கும் மாண்பு
ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.
உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!
பொன் வேண்டுமா?
ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை
எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.

Blogger Wordpress Gadgets